மருத்துவ  கவுன்சிலில்  பதிவுக்கு  அனுமதிப்பதில்  முறைகேடு  -  நடவடிக்கை எடுக்குமாறு  கோரிக்கை  

Published By: Digital Desk 4

23 Jul, 2019 | 10:28 PM
image

(ஆர்.விதுஷா)

கல்வி  பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில்   குறைந்த  பட்ச  தராதரங்களும்  இல்லாமல்  வெளிநாடுகளுக்கு   சென்று  மருத்துவப்படிப்பை  மேற்கொண்டு   பட்டதாரிகளாக   வந்திருப்பவர்களுக்கு  ஸ்ரீலங்கா  மருத்துவ  கவுன்சிலில்  பதிவு  செய்வதற்கு   அனுமதிக்கப்படுவதாக   குற்றஞ்சாட்டியிருக்கும்  அரசாங்க  மருத்துவ  அதிகாரிகள்  சங்கம்   அதற்கு   தகுதியற்றவர்களை    அனுமதிப்பதற்கு   மருத்துவ கவுன்சிலின்  அதிகாரிகளும்  ,  உறுப்பினர்களும்    எதிராக  கடுமையான  நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்  எனவும்  வலியுறுத்தியுள்ளது.  

இது  தொடர்பில்  கவனம்  செலுத்துமாறு  அரசாங்க  மருத்துவ  அதிகாரிகள்  சங்கத்தின்  செயலாளர்  வைத்தியர்  ஹரித  அளுத்கே  ,  ஸ்ரீலங்கா  மருத்துவ  கவுன்சிலின்  தலைவர்  பேராசிரியர்  ஹரேந்திர  டீ  சில்வாவுக்கு  கடிதமொன்றை  இன்று செவ்வாய்க்கிழமை  அனுப்பியுள்ளார்.  

அந்த  கடிதத்தின்  பிரதிகள்  சுகாதார சேவைகள் பணிப்பாளர் ,  ஸ்ரீலங்கா  மருத்துவ  கவுன்சிலின்  பதிவாளர்  , ஸ்ரீலங்கா  மருத்துவ  கவுன்சிலின் அனைத்து உறுப்பினர்கள்  ,  அனைத்து மருத்துவ  பீடங்கள், சுகாதார  நிறுவனங்களின்  தலைவர்கள்  மற்றும்   அரசாங்க  மருத்துவ  அதிகாரிகள்  சங்கத்தின்  அனைத்து கிளைகளிற்கும்    அனுப்பி  வைக்கப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09