(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அடுத்த மாதம் அறிவிப்போம் .அடுத்த மாதத்தில் இருந்து ஜனாதிபதி வேட்பாளருடன் ஐக்கிய தேசிய கட்சியின் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கும். மக்கள் எதிர்பார்க்கும் நபர் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் என ஐக்கிய தேசிய கட்சி பிரதி அமைச்சர் நலீன் பண்டார சபையில் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் ஆரோக்கியமான கொடுக்கல் வாங்கல் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் கொண்டுவரப்பட்ட நிருவாக மாவட்ட சட்டத்தில் திருத்தங்களை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் அதன்போது மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசிய கட்சியின் பக்கமே சர்ச்சைகளும் , பிரச்சினைகளும் இருப்பதாக சிலர் நினைக்கின்றனர்.
ஆனால் எமது பக்கத்தில் எந்த பிரச்சினையும் கிடையாது. நாங்கள் தமிழ் கூட்டமைப்பு , முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கின்றோம். நாங்கள் இவர்களுடன் சரியாக கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதினாலேயே 52 நாள் சூழ்ச்சியின் போது எங்களால் வெற்றிப் பெற முடியுமாக இருந்தது.
எவ்வாறாயினும் எமது பக்கத்தில் எந்த பிரச்சினையும் கிடையாது. கடந்த 4 வருடங்களில் நாங்கள் எல்லா கட்சிகளுடனும் பயணித்தது போன்று எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் பயணிப்போம் என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM