(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள குப்பைகளின் தொகை எவ்வளவு? எந்த நிறுவனம் இந்த குப்பைகளை கொண்டுவருகின்றது. கொண்டுவரப்பட்டுள்ள குப்பைகளின் எவ்வளவு குப்பைகள் மீளவும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது? கொழும்பு துறைமுகத்தில் எவ்வளவு தொகை கழிவுகள் கொண்டுவரப்பட்டுள்ளது என்ற காரணிகளை உடனடியாக பாராளுமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.
கழிவுப்பொருட்கள் அடங்கிய கொல்களைன்கள் 200 க்கு அதிகமானவை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் இவை பிரித்தானியாவில் இருந்து வந்துள்ளதாகவும், சரியாக 220 கொள்கலன்கள் கொண்டுவரப்பட்டுள்ளது, இதில் 102 கொள்கலன்கள் சுங்க திணைக்களத்தினால் துறைமுகத்தில் வைத்தே கண்டறியப்பட்டுள்ளது. எனினும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள கொள்கலன்களில் 120 க்கும் அண்ணளவான கொள்கலன்களை விடுவித்து கட்டுநாயக வர்த்தக வளைய பகுதியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இந்த கொள்கலன்கள் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆகவே இரண்டு ஆண்டுகளுக்கு அதிகமான காலங்கள் இவை கண்டறியப்படாது இருந்துள்ளது. அதேபோல் இதனை மீள் சுழற்சி செய்யாது வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ள கழிவுகள் குறித்து அவதானம் இல்லாது கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் இதுவரை காலம் கொண்டுவரப்பட்டுள்ள கழிவுகளின் தொகை எவ்வளவு? இதில் எவ்வளவு தொகையான கழிவுகள் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது? என்பதை கூற வேண்டும்.
கொண்டுவரப்பட்டுள்ள கழிவுகளில் ஒரு தொகை குப்பைகள் மிகவும் சூட்சமமாக நாட்டுக்குள் பரப்பிவிடப்பட்டுள்ளது. இதனால் சூழலுக்கு பாரிய அச்சுறுத்தலான நிலைமைகள் உருவாகும். இது கடந்த 2013 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலுக்கு அமையவே இதில் வழங்கப்பட்ட சுதந்திரத்திற்கு அமையவே இந்த கழிவு வியாபாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் பிரதான சில நிறுவனங்கள் தொடர்பில் இருப்பதாகவும் தெரிய வருகின்றது. ஆனால் இது குறித்து இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM