ஈரானில் உளவுபார்த்த அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சீ. ஐ. ஏ. யின் 17 பேரை கைது செய்துள்ளதாகவும் அதில் சிலருக்கு மரணதண்டனை விதித்துள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
ஈரான் , அமெரிக்காவுடன் செய்துகொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டதன் பின் அமெரிக்கா ஈரானிற்கு எதிராக பொருளாதார தடைகள் விதித்தது.
இந்நிலையில் ஈரான் தனது அணு ஆயுத உற்பத்தியை மேலும் விரிவுபடுத்தியது.
இரு நாடுகளுக்குமிடையே தற்பொழுது காணப்படும் பதற்றமான இச்சூழ்நிலை மற்றைய நாடுகளுக்கும் தாக்கம் செலுத்தியுள்ளது.
அத்தோடு ஈரானுடனான உறவுகளை மற்றைய நாடுகள் முறித்துக்கொள்ள வேண்டுமென அமெரிக்கா நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்துள்ள நிலையில் கடந்த மாதம் ஈரான் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதில் பெரும் போர் பதற்றம் உருவாகியது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஈரானின் முக்கிய இடங்களை தாக்குமாறு உத்தரவிட்டதையடுத்து, குறித்த உத்தரவின் விளைவுகளை கருத்திற்கொண்டு பின்னர் ட்ரம்ப் இடைநிறுத்தினார்.
இந்நிலையிலேயே அமெரிக்காவின் சீ. ஐ. ஏ. உளவாளிகளை கைது ஈரான் கைதுசெய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தக் கைது தொடர்பில் தெரியவருவதாவது,
இந்நிலையில் குறித்த நபர்கள் ஈரான் இராணுவத்தின் மென்பொருள் சார்ந்த ரகசிய தகவல்கள் என்பனவற்றை அமெரிக்காவுக்கு திருடி கொடுத்துள்ள குற்றச்சாட்டில் இவர்களுக்கு மரணதன்டனை வழங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ தெரிவிக்கையில்,
ஈரான் பொய்களின் புகலிடம் எனவும் , அமெரிக்க உளவாளிகள் எவரும் ஈரானில் கைதுசெய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM