தேயிலை, மிளகிற்கான கேள்வியை அதிகரிக்க வேண்டும் - அமைச்சர் சாகல 

Published By: Vishnu

23 Jul, 2019 | 01:32 PM
image

தேயிலை மற்றும் மிளகிற்கான கேள்வியை அதிகரித்து கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவது எமது பிரதான கடமையாகும் என‍ துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

 

அத்துடன் தேயிலை மற்றும் மிளகு உற்பத்தில் காணப்படுகின்ற விலை தளம்பல் காரணமாக மக்கள் பெருமளவு பொருளாதார பிரச்சினைகளிற்கு முகங்கொடுத்துள்ளனர்.

நாட்டினுள் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களிற்கு இணையாக தேயிலை மற்றும் மிளகு உற்பத்திகளின் பொருட்டு விசேட அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் பொருட்டும் ஒழுங்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

தெனியாய பிரதேசத்தில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை மக்களிற்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

பிட்டபெத்தர பிரதேச செயலக அலுவலகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய ஐந்து மாடி நிர்வாக கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் இதன்போது‍ அமைச்சர் சாகல ரத்னாயக்க தலைமையில் நடைப்பெற்றது. 

1400 மில்லியன் ரூபாவுக்கும் அதிக செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இப் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டதன் பின்னர் அமைச்சர் பிட்டபெத்தர பிரதேச செயலக ஆளுகைக்குட்பட்ட குறைந்த வருமானம் ஈட்டும் மக்களிற்கான காணி உறுதி பத்திரங்களையும் வழங்கி வைத்தார். 

அத்துடன் தெனியாய கொட்டபொல கொடகும்புரவில் 39 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பாலத்தை அமைச்சர் மக்கள் பாவனைக்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:17:53
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54