ஜோதிகா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஜாக்பாட்’ படத்தின் முன்னோட்டம் வெளியானது.
ஜோதிகா நடிப்பில் வெளியான ‘ராட்சசி’ பெரும் வெற்றி பெற்ற நிலையில், அவரின் நடிப்பில் தயாரான ‘ஜாக்பாட்’ படத்தின் முன்னோட்டம் இன்று 11 மணி அளவில் வெளியானது. இந்த படத்தில் அவர் மூத்த நடிகை ரேவதியுடன் இணைந்து, பல தில்லுமுல்லுகளை செய்து, கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து, சிறையிலிருந்து விடுதலையாகும் பெண்களின் வாழ்வாதாரத்திற்காகவும், அவர்களின் ஆதரவற்ற குழந்தைகளை காப்பாற்றுவதாகவும் தெரியவருகிறது.
முன்னோட்டத்தில் இடம்பெற்றுள்ள டொயலாக்குகள் அனைத்தும் கொமடியாகவும், இவ்விருவரின் விதவிதமான கெட்டப்புகள் அனைத்தும் சிரிப்பை வரவழைப்பதாகவும் அமைந்திருக்கின்றன. யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ் ,மன்சூர் அலிகான் ஆகிய முன்னணி கலைஞர்கள் கூட்டணி அமைத்து ஸ்பூப் வகை கொமடியை முயற்சித்திருக்கிறார்கள் என்றும் தெரியவருகிறது. அத்துடன் ஜோதிகா சிலம்பம் சுற்றுவதும், சண்டைக்காட்சிகளில் பறந்து பறந்து அடிப்பதும் ரசிகர்களை கவரும் என்றேச் சொல்லலாம். இதனால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்று ஒரு தரப்பினரும், மீண்டும் ஒரு வெற்றிப்படத்தை ஜோதிகா வழங்கவிருக்கிறார் என்று மற்றொரு தரப்பினரும் தெரிவிக்கிறார்கள்.
இந்த படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் கல்யாண். இவர் ஏற்கெனவே குலேபகாவலி என்ற படத்தை இயக்கியவர் என்பதும், திருமதி ஜோதிகா தற்போது அறிமுக இயக்குநர் பிரடெரிக் இயக்கத்தில் பொன் மகள் வந்தாள் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM