வடமேற்கு சிரியாவிலுள்ள சந்தையொன்றின் மீது ரஷ்ய போர் விமானம் நேற்று திங்கட்கிழமை மேற்கொண்ட வான் தாக்குதலில் 16 பொதுமக்கள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 45 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம் தெரிவிக்கிறது.
இட்லிப் மாகாணத்தில் மாரெத் அல்நுமான் பிராந்தியத்திலுள்ள சந்தையில் நடத்தப்பட்ட இத் தாக்குதலில் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளின் கீழ் மேலும் பலர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்ப தால் இறந்தவர்கள் தொகை மென்மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களில் மூவரின் சடலங்கள் இன்னும் அடையாளம் காணப் படாத நிலையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இட்லிப் மாகாணத்தில் சிரிய மற்றும் ரஷ்ய படையினரால் நடத்தப்பட்ட பிறிதொரு தாக்குதலில் இளம் புகைப்பட ஊடகவியலாளரான அனாஸ் அல் டயாப் உள்ளடங்கலாக 18 பேர் பலியானதற்கு மறுநாள் இந்தத் தாக்குதல் நடத்தப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM