வருடம் ஒன்றுக்கு பாராளுமன்றத்தில் உணவு மற்றும் குடிபான வகைகளுக்காக 120 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாக பாராளுமன்ற நிதி அதிகாரிகள் குழுவினர் மதிப்பீடு செய்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற ஊழியர்கள் மற்றும் பாராளுமன்றத்திற்கு வருகை தரும் விருந்தினர்கள் உணவு மற்றும் பானங்களை உட்கொள்கின்றனர், இதில் 75 சதவீத உணவுச் செலவு பாராளுமன்ற ஊழியர்களுக்கான செலவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் உணவுகள் வீண் விரயமாவதை தடுப்பதற்காக பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலை ஊழியர்கள் உணவு வகைகள் தயாரிப்பதை கணிசமாக குறைக்க வேண்டும் எனவும் பாராளுமன்றத்திற்கு சமூகமளிப்பவர்களின் விபரங்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் அதற்கேற்றால் போல் உணவு தயாரிக்க வேண்டும் எனவும் சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேவேளை பாராளுமன்றத்தில் ஆண்டொன்றுக்கு மின்சாரத்துக்கு 80 மில்லியன் ரூபாவும், தொலைபேசி பாவனைகளுக்கு 14.5 மில்லின் ரூபாவும், குடிநீருக்காக 9 மில்லியன் ரூபாவும் செலவிடப்படுவதாக பாராளுமன்ற நிதி பிரிவுக்கான பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மின்சார செலவுகளில் பெரும்பகுதி குளிரூட்டிக்காக (air-conditioning system) செலவுசெய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM