இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜம்பவானான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாகவுள்ளது.
1992 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் உலகில் அறிமுகமாகிய முத்தையா முரளிதரன் கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியா அணிக்கு எதிராக இடம்பெற்ற ஒருநாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார்.
தனது 19 வருடகால கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருநாள் அரங்கில் 534 விக்கெட்டுக்களையும், டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட்டுக்களையும் முரளிதரன் கைப்பற்றியுள்ளார்.
முரளிதரன் ஆடிய காலங்களில் இருந்த சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, ஸ்டீவ் வோக் உள்ளிட்ட பல துடுப்பாட்ட ஜாம்பவான்களை தனது சுழலில் மிரட்டியவர் முரளிதரன்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் பட்டியலில் முரளிதரன் முதல் இடத்தில் உள்ளார். இந்த சாதனையை இனிமேல் வேறு ஒரு பந்து வீச்சாளர் முறியடிப்பது என்பது நினைத்துக்கூட பார்க்கமுடியாத விடயம்.
இந் நிலையில், முரளிதரனின் அடையாளமாக திகழும் “800” என்ற பெயரிலேயே அவரது வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாகவும் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகவும் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து மற்றும் பல நாடுகளில் படப்பிடிப்பு நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவராத நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் டிசம்பர் மாதம் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM