திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திம்புள்ள பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் கெப் ரக வாகனம் ஒன்றும் முச் சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் கடும்காயங்களுக்குள்ளான முச்சக்கரவண்டி சாரதி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை – நாவலப்பிட்டி பீ-406 பிரதான வீதியில் தலவாக்கலை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி பகுதியை நோக்கிச் சென்ற கெப் ரக வாகனம் ஒன்றும் போகாவத்தையிலிருந்து பத்தனை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியும் திம்புள்ள பகுதியில் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி கடும்காயங்களுக்குள்ளாகியுள்ளார். கெப் ரக வாகனம் குறித்த முச்சக்கரவண்டியை மோதி விட்டு நிறுத்தாமல் சென்றதாகவும், பின்னர் பிரதேசவாசிகள் அவரை துறத்திப் பிடிக்க முற்பட்ட போது, குறித்த கெப் ரக வாகனத்தின் சாரதி நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். பின்னர் அவரின் வாக்குமூலத்தை எழுதிக்கொண்ட நாவலப்பிட்டி பொலிஸார் மேற்படி சாரதியை திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு ஒப்படைத்துள்ளனர்.
திம்புள்ள பத்தனை பொலிஸார் கெப் ரக வாகனத்தின் சாரதியை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM