மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு! 

Published By: R. Kalaichelvan

20 Jul, 2019 | 04:12 PM
image

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த பத்து வருடங்களாக தனிமையில் இருந்துவந்த வயோதிபரான கணேசமூர்த்தி சாமித்தம்பி (74) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர். 

இவரது உடலில் சிறு காயங்கள் காணப்படுவதால் இவரது மரணம் குறித்து உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். வழமையாக தனது வீட்டில் உள்ள மாந்தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றி விட்டு அருகில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்று வரும் இவர் இன்றை தினம் மகளின் வீட்டிற்கு வராமையினால் அவரை தேடிச் சென்ற மகள் தனது தகப்பனாரை தேடியபோது அவர் மலசலகூடத்தில் இறந்து கிடப்பதை கண்டு மட்டக்களப்பு பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.

 இது குறித்த மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் குற்றத்தடயவியல் பொலிசாரின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44