தமிழகத்தில் இந்தி திணிப்பை மோடி அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
“கல்வி, தொழில் என அனைத்து பரிமாணங்களிலும் இந்தியர்கள் முன்னேறி வருகின்றனர். அடுத்த தலைமுறையில் இந்தியர்களே மற்ற நாட்டவர்களுக்கு குருவாக இருப்பார்கள். தொழில்முனைவோரை உருவாக்கிடவும், தொழில்களை பெருகிடவும் அரசு சார்பில் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும்.
சூட்கேஸ்கள் ஆங்கிலேயரின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தக் கூடியது. நமது கலாச்சாரத்தை பின்பற்றும் நோக்கில் தான் வரவு செலவு திட்டம் சாதாரணமாக தாக்கல் செய்யப்பட்டது. மேலும் சூட்கேஸ் என்பதற்கு மறைமுகமாக வேறு அர்த்தமும் இருக்கிறது. சூட்கேஸ் கொடுப்பது, சூட்கேஸ் வாங்குவது போன்ற லஞ்ச பழக்கவழக்கங்களை அது குறிப்பதாக இருக்கிறது. மோடியின் அரசாங்கம் சூட்கேஸ் அரசாங்கம் அல்ல. மோடி அரசின் வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கும் வகையில் சூட்கேஸிற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.
தமிழகத்தில் ஹிந்தி திணிப்பு எல்லாம் மோடி அரசு செய்யவில்லை. மாறாக சிரேஷ்ட பாரத் போன்ற திட்டங்களால் தமிழகத்தில் தமிழை வளர்க்கும் முயற்சியில் பா.ஜ.க.வும் ஈடுபட்டு வருகிறது. ஹிந்தி திணிப்பு என்பது உங்களுக்கு கிடைத்த தவறான தகவல். தபால் துறை தேர்வில் நடந்தது நிர்வாக ரீதியிலான விவகாரம். அது ஹிந்தி திணிப்பு ஆகாது. தற்போது தபால் துறை நேர்முகப்பரீட்சைகளை தமிழில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM