" ஐக்கியத்திற்கு தடையாகும் அரைவேக்காட்டு அரசியல் " - சிவசக்தி ஆனந்தன்

Published By: Digital Desk 3

20 Jul, 2019 | 11:43 AM
image

நேர்­காணல்:- ஓமந்தை நிருபர்

தற்­போதைய சூழலில் எந்­த­வொரு தமிழ் அர­சியல் கட்­சிக்கும் இடையில் கொள்கை வேறு­பாடு இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. அனை­வரும் இணைந்த வடக்­கு–-­கி­ழக்கில் ஒரு சமஷ்டி ஆட்­சி­மு­றையை ஏற்­ப­டுத்­து­வ­தையே உட­னடி இலக்­காகக் கொண்­டு­ செ­யற்­ப­டு­கின்­றனர். அப்­ப­டி­யி­ருக்க ஈ.பி.ஆர்.எல்.எப்.கொள்­கை­யி­லி­ருந்து வில­கி­விட்­ட­தாக குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைப்­பது, அரை­வேக்­காட்டு அர­சி­ய­லையே வெளிப்­ப­டுத்­து­கின்­றது. இதுவே கொள்­கை­யி­லி­ருந்து விலகிச் செல்லும் கூட்­ட­மைப்­புக்கு மாற்­றான வலு­வான அணி ஐக்­கி­ய­மாக உரு­வா­கு­வ­தற்கும் தடை­யாக இருக்­கின்­றது என்று ஈ.பி.ஆர்.எல்.எப். செய­லா­ளரும், வன்­னி­மா­வட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சிவ­சக்தி ஆனந்தன் கேச­ரிக்கு வழங்­கிய செவ்­வி­யின்­போது குறிப்­பிட்டார். அச்­செவ்­வியின் முழு­ வ­டிவம் வரு­மாறு: 

கேள்வி:- விக்­னேஸ்­வரன் தலை­மை­யி­லான கூட்­டணி ஒரு கட்­ட­மைப்­பாக அமை­வதில் எவ்­வா­றான முன்­னேற்­றங்கள் காணப்­ப­டு­கின்­றன?

பதில்:- முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. விரைவில் மக்­க­ளுக்கு நம்­பிக்­கை­ய­ளிக்கும் வகை­யி­லான செய்­திகள் வெளிவரும்.

கேள்வி:- இந்தக் கூட்­ட­ணியில் யாரெல்லாம் இணை­யலாம் என்­பது தொடர்பில் உங்­க­ளுக்கு நிபந்­த­னைகள் உள்­ள­னவா?

பதில்:- தமிழ்த் தேசிய இனத்தின் இன்­றைய அர­சியல் சூழல் ஒரு பாரிய நெருக்­க­டியில் சிக்­கித்­த­விக்­கி­றது. மக்கள் போராடிக் களைத்­துப் ­போ­யுள்­ளனர். அவர்­க­ளுக்கு நம்­பிக்கை அளிக்­கக்­ கூ­டிய ஒரு தலைமை வேண்டும். அந்தத் தலை­மையை ஒரு தனி­ந­பரோ, ஒரு கட்­சியோ வழங்க முடி­யாது என்­பதே யதார்த்தம். பல­த­ரப்­பி­ன­ரையும் அழைத்து ஒரு மேசையில் அம­ர­வைத்து கலந்­து­ரை­யா­டு­வதே கடி­ன­மான நிலையில், முன்­ நி­பந்­தனை விதித்தல் சாத்­தி­ய­மற்­றது.

இன்­றைய சூழலில் இணைந்த        வடக்­கு-­–கி­ழக்கில் சமஷ்டி முறை­மை­ யி­லான ஆட்­சியை அமைப்­ப­தற்கும் அதற்­கான முழு­மை­யான அதி­கா­ரங்­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கும் விருப்பம் உடை­ய­வர்கள் அனை­வ­ரையும் உள்­ள­டக்­கிய ஒரு கட்­ட­மைப்பை ஏற்­ப­டுத்­து­வது அவ­சியம். இந்தத் தேவையைப் புரிந்­து­கொள்ளும் அனை­வ­ரையும் ஓர­ணியில் திரட்ட வேண்­டி­யது காலத்தின் கட்­டாயம்.

தமிழ்த் தேசிய இனத்தின் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்­யப்­பட்­டதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற ஜன­நா­ய­கத்­தி­னூ­டாக எமது உரிமைக் கோரிக்­கையை காத்­தி­ர­மா­கவும் வினை­த்திறன்மிக்க வகை­யிலும் முன்­னெ­டுத்துச் செல்லும் என்று எதிர்­பார்த்தோம். ஆனால் கூட்­ட­மைப்பின் பெயரைப் பயன்­ப­டுத்தி தமி­ழ­ரசுக் கட்சி தனது ஏக­போக தலை­மையை நிலை­நாட்­டிக்­கொண்­ட­துடன், தனது சுய­ந­லன்­களைப் பூர்த்தி செய்­வ­தற்­காக அர­சாங்­கத்­துடன் கைகோர்த்துச் செயற் ­ப­டு­கின்­றது.

இதன் விளை­வாக அர­சாங்கம் அர­சி யல் தீர்வு முயற்­சியை திசை திருப்பும் வகையில் நாள்­தோறும் புதுப்­புது பிரச்­சி­னை­களைத் தமிழர் தாயகப் பிர­தே­சங்­களில் உரு­வாக்­கு­கி­றது. ஏற்­க­னவே அர­சியல் கைதி­களின் விடு­தலை, காணி விடு­விப்பு, காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான நீதியைப் பெற்­றுக்­கொள்ளல் போன்ற அன்­றாடப் பிரச்­சி­னைகள் நிலு­வையில் இருக்­கையில், தற்­பொ­ழுது தமி­ழர்­களின் வழி­பாட்­டி­டங்கள் திட்­ட­மிட்டு பௌத்­த­ம­ய­மாக்­கப்­பட்­டு­ வ­ரு­கின்­றன. இதற்­கெ­தி­ரா­கவும் போரா­ட­வேண்­டி­யுள்­ளது.

புரை­யோ­டிப்­போ­யுள்ள இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்­வு­காண வேண்­டிய அதே நேரத்தில் அன்­றாடம் புதி­து­பு­தி­தாகக் கிளப்­பப்­படும் பிரச்­சி­னை­க­ளுக்கும் முகங்­கொ­டுக்க வேண்­டி­யுள்­ளது. ஆகவே முன்­னெப்போ­தை­யும்­விட கூடு­த­லான கவ­னத்­துடன் பணி­யாற்ற வேண்­டி­யுள்­ளது. இன்­றைய சூழலில் தமிழ்ச் சமூகம் ஒன்­று­பட்டு செயற்­பட வேண்­டி­யது மிகவும் அவ­சியம்.

கேள்வி:- ஈ.பி.ஆர்.எல்.எப்புக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணிக்கும் இடையில் கொள்கை ரீதி­யான வேறு­பாடு காணப்­ப­டு­

கின்­றதா?

பதில்:- தற்­போதைய, சூழலில் எந்­த­ வொரு தமிழ் அர­சியல் கட்­சிக்கும் இடையில் கொள்கை வேறு­பாடு இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. அனை­வரும் இணைந்த வடக்­கு-­–கி­ழக்கில் ஒரு சமஷ்டி ஆட்­சி­மு­றையை ஏற்­ப­டுத்­து­வ­தையே உட­னடி இலக்­காகக் கொண்­டு ­செ­யற்­ப­டு­கின்­றனர். அணு­கு­மு­றை­யிலும், செயல்­மு­றை­யிலும் வேறு­பாடு இருக்­கலாம். யதார்த்தம் இவ்­வாறு இருக்­கையில் ஏதோ ஈ.பி.ஆர்.எல்.எப். கொள்­கை­யி­லி­ருந்து தடம் மாறி­விட்­ட­தா­கவும் தாங்கள் தான் உண்­மை­யான அசல் கொள்கைப் பற்­றா­ள­ரா­கவும் காட்­டிக்­கொள்ள முனையும் அர­சியல் அரை­வேக்­காட்­டுத்­த­னமே ஐக்­கி­யத்­திற்குப் பிரச்­சி­னை­யாக உள்­ளது.

தனது பாட்டன் சொத்­தான கட்­சி­யுடன் இணைந்து அந்த சின்­னத்­தில்தான் அனை­வரும் போட்­டி­யிட வேண்டும் என்­பதில் குறி­யாக இருந்து, தமி­ழ­ரசுக் கட்­சியைப் போன்றே தானும் தனது ஏக­போக தலை­மையை நிலை­நாட்­டு­வதை நோக்­க­மாகக் கொண்டே தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி செயற்­ப­டு­கின்­றது. அதற்­கான காய்­ந­கர்த்­தலை மேற்­கொள்­வதை ஏனையோர் புரிந்­து­கொண்­டு­வி­டு­வதால் தனது அர­சியல் அனு­ப­வ­மின்­மையின் கார­ண­மாக விரக்­தி­ய­டைந்து ஏனை­யோரை கண்­ட­படி விமர்­சிக்­கி­றது.

தமிழ்மக்கள் பேர­வை­யிலும் அதனைத் தொடர்ந்து ஏனைய அர­சியல் செயற்     ­பா­டு­க­ளிலும் இவர்­க­ளுடன் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டலாம் என்று நாம் நினைத்­தி­ருந்த வேளை, தமி­ழ­ரசுக் கட்­சிக்கும் அகில இலங்கை தமிழ்க் காங்­கி­ர­ஸுக்கும் இடையில் குணாம்­சத்தில் வித்­தி­யாசம் இல்லை என்­பதை இந்த அர­சியல் அரை­வேக்­கா­டு­களும் நிரூ­பித்து விட்­டன. ஒருநாடு இரண்டு தேசம் என்­பதை வெளியில் சொல்­லிக்­கொண்டு அகில இலங்கை தமிழ்க் காங்­கி­ரஸின் ஒற்­றை­யாட்சி பழைய யாப்­பையே இன்­ற­ளவும் பின்­பற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி தனக்­கென்று ஒரு யாப்பை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றதா? அகில இலங்கை தமிழ்க் காங்­கிரஸ் என்­பது சமஷ்­டியைக் குறிக்­கி­றதா அல்­லது இரண்டு தேசம் ஒரு நாடு என்­பதைக் குறிக்­கி­றதா? அல்­லது ஒற்­றை­யாட்­சியைக் குறிக்­கி­றதா? அகில இலங்கை என்­பதன் கருத்தைக் கூட புரிந்­து­கொள்ள முடி­யாத ஞான­சூன்­யங்கள் ஏனை­யோரை கொள்­கை­யி­லி­ருந்து வில­கி ­விட்­டார்கள் என்று சொல்­வது வேடிக்­கை­யாக உள்­ளது.

இலங்கை தேசிய காங்­கிரஸ் ஐக்­கிய தேசியக் கட்­சி­யாக மாறி­யதன் பின்னர், தமிழர் தரப்பைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி தனது அர­சியல் இருப்பைத் தக்­க­வைப்­ப­தற்­காக ஜி.ஜி.பொன்­னம்­பலம் அன்று அகில இலங்கை தமிழ்க் காங்­கி­ரஸை தோற்­று­வித்தார். அவர் பாரா­ளு­மன்­றத்தில் 50:50 என்ற முழக்­கத்தை முன்­வைத்துச் செயற்­பாட்­டாரே அன்றி ஒரு போதும் ஒற்­றை­யாட்­சிக்கு எதி­ராகச் செயற்­ப­ட­வில்லை. மேலும் சமஷ்டி தமி­ழர்­க­ளுக்கு ஒத்­து­வ­ராது என்றும் பேசி­யவர். பாரா­ளு­மன்­றத்தில் 50:50 கோஷத்தை முன்­வைத்­தவர் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்­சியில் தனக்கு அமைச்சுப் பத­வியைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக பத்து  லட்சம் பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­களின் வாக்­கு­ரிமை பறிக்­கப்­ப­டு­வ­தற்கும் அவர்கள் நாடற்­ற­வர்கள் ஆவ­தற்கும் துணை­ போ­யி­ருந்தார். ஜி.ஜி.யின் இச்­செ­யலின் கார­ண­மா­கவே தந்தை செல்வா காங்­கி­ர­ஸி­லி­ருந்து பிரிந்து இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியை தோற்­று­வித்தார். இது வர­லாறு.

மக்கள் செல்­வாக்­குடன் இருந்த தந்தை செல்வா, அர­சி­யலில் ஜி.ஜி. ஓரங்­கட்­டப்­பட்ட போதிலும் அவ­ரது வீட்­டிற்கே சென்று அவ­ருடன் உரை­யாடி சௌமி­ய­மூர்த்தி தொண்­ட­மா­னையும் உள்­ள­டக்கி தமிழர் ஐக்­கிய முன்­ன­ணியை உரு­வாக்­கினார். பின்னர் இதுவே தொண்­டமான் தவிர்ந்த தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணி­யாக மாறி­யது. இதுவும் வர­லாறு. ஜி.ஜி.  மறைந்த பின்னர் அவ­ரது மகன் குமார் பொன்­னம்­பலம் கூட்­டணி சார்பில் யாழ்ப்­பா­ணத்தில் போட்­டி­யிட விருப்பம் தெரி­வித்த வேளையில் அமிர்­த­லிங்கம் மறுத்­து­விட்டார். அதனால் கோபம் கொண்டு சுயேட்­சை­யாகப் போட்­டி­யிட்­ட­துடன், பின்னர் ஐ.தே.கவிடம் தனக்கு இருந்த செல்­வாக்கைப் பயன்­ப­டுத்தி காங்­கிரஸ் கட்­சி­யையும் மீட்­டெ­டுத்­துக்­கொண்டார். இது காங்­கி­ரஸின் வர­லாறு.

இன்று நேர்­மையின் உறை­வி­ட­மாகத் தன்னைக் காட்­டிக்­கொள்ளும் குமார் பொன்­னம்­ப­லத்தின் புதல்வர் காங்­கி­ரஸின் மேற்­படி தவ­று­களை மறைப்­ப­தற்­கா­கவே அந்தக் கட்­சியைத் தேர்­த­லுக்­கான கட்­சி­யா­கவும் சின்­ன­மா­கவும் வைத்­துக்­கொண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி, தமிழ்த் தேசியப் பேரவை போன்ற புதுப்­புது பெயர்­களில் கட்­சியை ஆரம்­பிக்­கின்றார். இவற்றில் ஒரு­வர்­கூட புதி­தாக இணை­ய­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இவை­களைப் பதிவு செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­யைக்­கூட அவர் எடுக்­க­வில்லை.

கஜேந்­தி­ர­குமார் தனக்­கென்று ஒரு பெரிய மக்கள் ஆத­ரவுத் தளம் இருப்­ப­து­போ­லவும் தன்னால் மட்­டுமே தமிழ் மக்­களின் பிரச்­சி­னையைத் தீர்க்க முடியும் என்­பது போலவும் தன்னை முன்­னி­றுத்தி அர­சியல் செய்­கின்றார். அவர் அர­சி­ய­லுக்கு வந்­ததே ஒரு விபத்து என்­பதை அவ­ருக்கு நினை­வூட்ட விரும்­பு­கிறோம். கடந்த நாற்­ப­தாண்­டு­கால ஆயுதப் போராட்ட வர­லாற்றில் கஜேந்­தி­ரனின் அர­சியல் பங்­க­ளிப்பு எத்­த­கை­யது என்­பதை மக்கள் அறி­வார்கள். 

ஒரு கட்­சிக்கு நட்புச்சக்­திகள் யார்? நேச சக்­திகள் யார்? ஆத­ர­வா­ளர்கள் யார்? நட்­பு­ நாடு எது? ஏனைய நாடு­களை எப்­படி எமது நியா­ய­மான கோரிக்­கை­யின்பால் வென்­றெ­டுப்­பது போன்ற சிந்­தனைத் தெளிவும் அணு­கு­மு­றையும் அவ­சியம். இவற்றை அர­சியல் அரை­வேக்­கா­டு­க­ளிடம் எதிர்­பார்ப்­பது கடினம் தான். எனவே எம்­மீது சேறு­பூ­சு­வ­தற்கு கஜேந்­தி­ர­கு­மா­ருக்கு அனு­ப­வமும் போதாது; அரு­க­தையும் கிடை­யாது.

கேள்வி:- கூட்­ட­மைப்­பி­லி­ருந்து நீங்கள் வெளியே­றி­ய­போது தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணி­யுடன் காணப்­பட்ட நெருக்­க­மான உறவில் விரிசல் ஏற்­ப­டு­வ­தற்குக் காரணம் என்ன?

பதில்:- காங்­கி­ரஸின் கப­டத்­தனம் எமக்குப் புரிந்­து­விட்­டது தான் காரணம். ஒன்­றுக்கும் மேற்­பட்ட பதிவு செய்­யப்­பட்ட கட்­சிகள் இணைந்து ஒரு கூட்­ட­ணியை உரு­வாக்­கினால் அதற்கு ஒரு பொதுப்­பெ­யரும் சின்­னமும் கிடைக்கும் என்று காங்­கிரஸ் கூறி­யது. நாமும் சில சட்­டத்­த­ர­ணிகள் இருக்­கின்­றார்­களே என்­ப­தற்­காக அந்த பொறுப்பை காங்­கி­ர­ஸிடம் ஒப்­ப­டைத்தோம். ஆனால் இறு­தி­ வரை அதற்­கான முயற்­சி­களை மேற்­கொள்­ளாமல் இறுதி நேரத்தில், ’ஒன்றில் நீங்கள் எங்கள் கட்­சியில் போட்­டி­யி­டுங்கள் அல்­லது நாங்கள் உங்கள் கட்சிச் சின்­னத்தில் போட்­டி­யி­டு­கிறோம்’ என்­றார்கள். 

அந்த நேரத்தில் கூட்­ட­மைப்பின் செல்­வாக்கு கணி­ச­மான அள­விற்குச் சரிந்­தி­ருந்த போதிலும் கூட்­ட­மைப்­பிற்கு எதி­ராகப் புதி­தாகக் கள­மி­றங்­கு­கையில் ஒரு வலு­வான கூட்­ட­ணியில் ஒரு பொது­வான சின்­னத்தில் போட்­டி­யிட்டால் மட்­டுமே மக்­களின் நம்­பிக்­கையைப் பெற்­றுக்­கொள்ள முடியும் என்ற நிலை இருந்­தது. ஒரு குறு­கி­ய­கால இடை­வெளியில் எமக்கு வேறு தெரி­வு­களும் இருக்­க­வில்லை. எனவே, நாம் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் சின்­ன­மான உத­ய­சூ­ரியன் சின்­னத்தில் போட்­டி­யிட்டோம். 2001ஆம் ஆண்டு பாரா­ளு­மன்ற தேர்­தலின் போது விடு­த­லைப்­பு­லி­களின் ஆத­ர­வோடு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முதல் தட­வை­யாக உதய சூரியன் சின்­னத்தில் போட்­டி­யிட்­டது என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

பொதுச் சின்­னத்தைப் பெறு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­யினை மேற்­கொள்­ளாமல் நம்­பிக்கைத் துரோகம் செய்­து­விட்டு இன்று எம்­மீது பழி­போ­டு­கின்­றனர். மக்கள் நலனைக் கருதி அனைத்­தையும் ஒதுக்­கி­வைத்­து­விட்டு ஒன்­றி­ணைவோம் என்ற நம்­பிக்­கையில் நாம் பல விட­யங்­களை வெளியில் சொல்­லாமல் இருந்தோம். அவர்கள் தொடர்ந்தும் எம்­மீது சேறு­பூசும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வதால் அவர்­க­ளது நிலைக்கு இறங்­கி­வந்து நாமும் பதில் சொல்ல வேண்­டி­ய­ நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டு­விட்­டது. மக்கள் இவர்­களைப் புரிந்­து­கொள்­வார்கள் என்று நம்­பு­கிறோம். 

கேள்வி:- தமிழ்மக்கள் பேர­வையின் அங்­கத்­துவ அர­சியல் கட்­சிகள், பொதுச்­சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தற்கு ஏக­ம­ன­தாகத் தீர்­மா­னிக்­கப்­பட்­டதா? 

பதில்:- தமிழ்மக்கள் பேரவை ஓர் அர­சியல் கட்சி அல்ல; அது ஒரு மக்கள் அ­மைப்பு அங்கு பொதுச்சின்னம் பற்றி பேசு­வது தொடர்­பாக சந்­தர்ப்­பமும் இல்லை. அவ்­வாறு பேசப்­ப­டவும் இல்லை. அவ்­வா­றான ஒரு தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­ட­தாக எமக்குத் தெரி­யப்­ப­டுத்­தவும் இல்லை அதற்கான அழைப்பும் எமக்கு விடுக்­கப்­ப­ட­வில்லை. கடந்த உள்­ளூராட்சி தேர்­தலின் போது எம்­மையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியும் சேர்ந்து ஒரு உடன்­பாட்­டுக்கு வரும்­படி ஆலோ­சனை கூறி­னார்­களே தவிர பொதுச்சின்­னத்தில் போட்­டி­யி­டு­வது தொடர்பில் கூறவும் இல்லை ஆலோ­சனை வழங்­கவும் இல்லை. தங்­களை நியா­யப்­ப­டுத்­து­வ­தற்குப் புதி­து­பு­தி­தாக சில விட­யங்­களை கூறி­வ­ரு­கின்­றார்கள். மக்­களின் கேள்­வி­க­ளுக்கு பதில் அளிக்­க­மு­டி­யா­த­வர்கள் பொய்­யான தக­வலின் மூலம் தங்­களை நியா­யப் ­ப­டுத்த முயற்­சிக்­கி­றார்கள், அவ்­வ­ள­வுதான்.

கேள்வி:- உள்­ளூ­ராட்சி தேர்தல் நடை­பெ­று ­வ­தற்கு முன்­ன­தாக உங்கள் கட்­சியின் தலைவர் சுரேஸ்­ பி­ரே­மச்­சந்­திரன் டில்­லிக்கு அழைக்­கப்­பட்­டரா?

பதில்:- அவர் இந்­தி­யா­விற்குப் போயி­ருந்தார். அது உண்மை. இந்­தி­யா­விற்குச் செல்­வ­தற்கு இந்­திய அர­சாங்­கத்தின் அழைப்பு அவ­சி­ய­மில்லை.

கேள்வி:- இந்­தியா சென்று வந்­ததன் பின்னர் தமிழர் விடு­தலைக் கூட்­டணி மற்றும் சில தரப்­புக்­களை இணைத்­துக்­கொண்டு உள்­ளூ­ராட்சி தேர்­தலில் உதயசூரியன் சின்­னத்­தில்­போட்­டி­யிட வேண்டும் என்று தீர்­மா­னித்­த­மைக்­கான காரணம் என்ன?

பதில்:- தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் சின்­னத்தில் போட்­டி­யிட்­ட­தற்­கான கார­ணத்தை முன்­ன­மேயே சொல்­லி­ விட்டேன். இதற்கும் இந்­தியா சென்­று­வந்­த­தற்கும் எவ்­விதத் தொடர்பும் இல்லை.

கேள்வி:- உள்­ளூ­ராட்சி சபை தேர்­தலின் பின்னர் நீங்கள் தவி­சாளர் பத­விக்­காக பெரும்­பான்மை கட்­சி­க­ளுடன் கைகோர்த்து ஆட்சி அமைத்­தமை உட்­பட தொடர்ச்­சி­யாக உங்­க­ளு­டைய கட்சி கொள்கை ரீதி­யான பற்­று­றுதி இல்­லாத நிலையில் செல்­கின்­றது என்ற விமர்­ச­னத்தை எவ்­வாறு பார்­க்கின்­றீர்கள்?

பதில்:- உள்­ளூராட்சி சபை என்­பது தமி­ழீ­ழத்­திற்­கான தேர்­தலும் அல்ல. அது அதற்­கான சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பும் அல்ல. முத­லா­வ­தாக காங்­கிரஸ் அல்­லது தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணி­யி­னரின் பொறுப்­பற்ற செயலின் கார­ண­மா­கவே ஒரு பொதுச்சின்­னத்தை அடைய முடி­யாமல் போனது. அது நடை­பெற்­றி­ருந்தால் தமி­ழ­ரசுக் கட்சி பெரு­ம­ளவில் வீழ்ச்­சியைச் சந்­தித்­தி­ருக்கும். அதற்கு தேர்தல் முடி­வு­களே சாட்சி. கஜேந்­தி­ர­குமார் தனது தவறை மறைப்­ப­தற்­கா­கவே இத்­த­கைய கருத்­துக்­களைக் கூறி­வ­ரு­கிறார்.

யாழ்ப்­பாணம் மாந­க­ர­ச­பையின் ஆட்­சியைக் கைப்­பற்­று­வ­தற்கு அவர் டக்ளஸ் தேவா­னந்­தா­விற்குத் தூது அனுப்­பி­யது எந்தக் கொள்­கையின் அடிப்­ப­டையில்? அவர் செய்தால் தூய்­மை­வாதம் ஏனையோர் செய்தால் கொள்கைப் பிறழ்வா?

கிழக்கு மாகா­ணத்தில் பொத்­துவில் பிர­தேச சபையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்­கிரஸ் கட்­சியைச் சேர்ந்த உறுப்­பினர் ஐக்­கிய தேசியக் கட்­சியின் உறுப்­பி­னரை பிர­தேச சபைத் தலை­வ­ராக ஆத­ர­வ­ளித்­த­மையும் திருக்­கோவில் பிர­தேச சபையில்  ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்­த­வரை உப தவி­சா­ள­ராக்க வாக்­க­ளித்­த­மையும் எந்த வகைக்குள் இணைப்­பது? இன்று வரை அவர்­கள்­மீது தாங்கள் நட­வ­டிக்கை எடுக்­காமல் இருப்­பது ஏன்? கொள்கைச் சிங்­கங்கள் இதற்கு பதி­ல­ளிப்­பார்­களா?

போராட்­டமே அர­சியல் அதி­கா­ரத் தைக் கைப்­பற்­று­வ­தற்­கா­கத்­தானே. தேர்­தலில் நிற்­பதும் ஆட்சி அமைப்­ப­தற்­கா­கத்­தானே. உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல்கள் மூலம் அந்­தந்த பிர­தே­சங்­களின் தேவை­களை உணர்ந்து கிடைக்­கக்­கூ­டிய வரிப்­ப­ணத்­தைக் கொண்டும் மத்­திய அரசின் நிதி­யு­த­வியைக் கொண்டும் அபி­வி­ருத்திப் பணி­களை மேற்­கொள்ள முடியும். பாதிக்­கப்­பட்ட எமது பிர­தே­சத்தின் அபி­வி­ருத்­தியைத் தேசியக் கட்­சி­களின் கைகளில் கொடுப்­பதன் மூலம் மக்கள் மேலும் நம்­பிக்கை இழக்கும் சூழல் உரு­வாகும். இதனைக் கருத்தில் கொண்டே நாம் தலைமைப் பத­விக்குப் போட்­டி­யிட்டோம். வவு­னியா நக­ர­பி­தா­வுக்­கான போட்­டியில் மட்­டுமே நாம் வெற்­றி­பெற்றோம்.

பாரா­ளு­மன்றத் தேர்தல் தவிர்ந்த ஏனைய தேர்­தல்­களில் போட்­டி­யிட மாட்டோம் என்று தெரி­வித்­தி­ருந்த கொள்கைப் பற்­றா­ளர்கள் உள்­ளூராட்சி சபைத் தேர்­தல்­களில் போட்­டி­யிட்­டதன் காரணம் என்ன? இது என்ன கொள்கைப் பற்று? ஒற்­றை­யாட்­சிக்குள் மாகாண சபை முறை­மையை அறி­மு­கப்­ப­டுத்­திய அர­சியல் யாப்பின் 13ஆவது திருத்­தத்தை ஏற்­கா­த­வர்கள் மாகா­ண­சபைத் தேர்­தல்­களில் போட்­டி­யிட இருப் ­ப­தற்­கான காரணம் என்ன? வடக்கின் முன்னாள் முத­ல­மைச்சர், விக்­னேஸ்­வ­ரனின் பத­வியை  ரா­ஜி­னாமா செய்யச் சொன்­ன­வர்கள் இன்று அந்தத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­காக முண்­டி­ய­டித்துச் செயற்­ப­டு­வதன் நோக்கம் என்ன?  இது எத்­த­கைய அர­சியல் நேர்மை?

கேள்வி:- இந்­தி­யாவின் முக­வர்­க­ளாக ஈ.பி.ஆர்.எல்.எப்.செயற்­ப­டு­கின்­றதா? 

பதில்:- யாருக்கும் முக­வர்­க­ளாகச் செயற்­பட வேண்­டிய தேவை ஈ.பி.­ஆர்­.எல்­.எப்பிற்குக் கிடை­யாது. எமது தேசிய இனப்­பி­ரச்­சினைத் தீர்­விற்கு நாம் இலங்கை அர­சாங்­கத்தை மட்டும் நம்­பி­யி­ருக்க முடி­யாது. எமது நியா­ய­மான கோரிக்­கையை வென்­றெ­டுப் ­ப­தற்கு சர்­வ­தேச சக்­தி­களின் ஆத­ரவும் தேவை. உள்­நாட்­டிலும் சர்­வ­தேச மட்­டத்­திலும் எதி­ரி­களைக் குறைத்து நட்பு சக்­தி­க­ளையும் ஆத­ரவு சக்திகளையும் அதிகரித்துக்கொள்வதே எமது கோரிக்கையை வென்றெடுப்பதற்கான சரியான பாதையாக அமையும். 

கேள்வி:- ஒற்றையாட்சிக்குள் மாகாண சபை முறைமையை அரசியல் தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாக ஏற்றுக்கொள்கின்றீர்களா?

பதில்:- ஈழத் தமிழர்கள் பயங்கர வாதிகள் அல்ல என்பதையும், அவர் களின் தனிநாட்டுக் கோரிக்கை பயங்கரவாதக் கோரிக்கை அல்ல என்பதையும் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதமே தமிழ்த் தேசிய இனத்தின் பிரிந்துபோவதுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை வலியுறுத்திப் போராட வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதையும் அந்தத் தேசிய இனம் சுயமரியாதையுடனும், பாதுகாப்புடனும் இலங்கை தேசத்தின் சம பங்காளிகளாகவும் வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்படுமானால் மாற்று யோசனை குறித்தும் சிந்திப் பதற்குத் தயாராய் இருக்கிறது என்பதை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்காட்டுவதற்காகவுமே மாகாண சபை முறைமையை அன்று நாம் ஏற்றுக் கொண்டோம்.

இதற்காக நாம் கொடுத்த விலைகள் அதிகம். அதிலும் குறிப்பாக அதற்கான தேர்தலை எதிர்கொண்டதிலிருந்து அதனை நிர்வகிப்பது வரை, நாம் எதிர்கொண்ட சவால்களும் தியாகங்களும் ஏராளம். அன்று ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடாதவர்கள், அதனைக் கேலி செய்தவர்கள் இன்று மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அலைமோதுகின்றனர். ஒருவரைத் துரோகி பட்டம் கட்டுகின்றனர். தன்னைத் தவிர யாருமே கொள்கைப் பற்றாளர்கள் இல்லை என்று இறுமாப்படைகின்றனர். தியாகங்களைச் செய்தவர்கள் தொடர்ந்தும் போராடுகிறோம். பதவியை மட்டுமே இலக்காகக் கொண்டவர்கள் தூய்மை வேடம் போடுகின்றனர். 

மாகாணசபை முறைமை என்பது எமது தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக இல்லாவிட்டாலும் பதின்மூன்றாவது அரசியல் திருத்தச் சட்ட மூலத்தின் கீழ் அதற்குக் குறித் தொதுக்கப்பட்ட அதிகாரங்களை முழுமையாகப் பெற்றுக்கொள்வதுடன், அதிலிருந்து நிரந்தரத் தீர்வை நோக்கி நகரவேண்டும். மாகாணசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீளப் பெறமுடியாத வகையில் அரசியல் யாப்பில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22