நாடளாவிய ரீதியில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மாணிக்க கல் அகழ்வுகளை சுற்றிவளைப்பதற்காக விசேட பொலிஸ் குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை விடுத்துள்ளார்.
புவியியல் ஆராய்ச்சி மற்றும் மாணிக்க அகழ்வு பணியகத்தின் நிலைமை தொடர்பிலான விசேட கூட்டம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பிலுள்ள புவியியல் ஆராய்ச்சி மற்றும் மாணிக்க அகழ்வு பணியகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது சமுத்திர உள்ளிட்ட அனைத்து வளங்களை பாதுகாப்பதற்கான விசேட நிறுவனமொன்றை நிறுவுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
நாடளாவிய ரீதியில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படுகின்ற மாணிக்க கல் அகழ்வில் ஈடுப்படுவோருக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதன்போது சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மாணிக்க கல் அகழ்வுகளை சுற்றிவளைப்பதற்காக விசேட பொலிஸ் குழுவை நியமிக்குமாறும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு பூஜித்த ஜயசுந்தரவிற்கு உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM