ஐ.எஸ்.இன் நடவடிக்கை இலங்கையை பாதிக்கும் 

02 Dec, 2015 | 09:10 AM
image

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­தி­களின் தாக்­கு­தல்கள் அதி­க­ரிக்கும் போது மத்­திய கிழக்கில் ஸ்திர­மில்லாத நிலை தலை­தூக்கும். இதன் போது இலங்­கையில் ஏற்­படும் பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு நாம் இப்­போதே தயா­ராக வேண்டும் என்று எச்­ச­ரிக்கை விடுத்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, வர­வு-­ – செ­ல வுத் திட்­டத்தில் குறை­பா­டுகள் இருப்பின் எதிர்க்­கட்­சிகள் யோச­னை­க­ளையும் திருத்­தங்­க­ளையும் முன்­வைக்­கலாம் என்றும் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற வரவு – செலவுத் திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 8 ஆம் நாள் விவா­தத்­தினை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்றும் போதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வாறு தெரி­வித்தார். பிர­தமர் சபையில் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

அமெ­ரிக்­காவைத் தவிர்ந்த உலகின் பல்­வேறு நாடு­களில் பொரு­ளா­தார நெருக்­கடி தலை­தூக்கி வரு­கின்­றது. இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் ஐ.எஸ்.ஐ.எஸ். நட­வ­டிக்­கைகள்

அதி­க­ரிக்கும்போது

மத்­திய கிழக்கில் ஸ்திர­மில்லாத நிலை தலை தூக்கும்.

இதனால் எமது நாட்­டிலும் பாரிய பொரு­ளா­தார நெருக்­க­டியை சந்­திக்க நேரிடும். அவ்­வா­றான நிலை ஏற்­பட்டால் அதனை சமா­ளிப்­ப­தற்­கான முன்­னேற்­பாட்டு நட­வ­டிக்­கை­யாக சர்­வ­தேச நாணய நிதி­யத்­துடன் சில நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு நிதி­ய­மைச்சர் தயா­ரா­க­வுள்ளார்.

வரவு – செலவுத் திட்­டத்தின் குறை­பா­டு­களை விமர்­சிக்கும் எதிர்­கட்­சிகள் அதி­லுள்ள குறை­பா­டு­களை சுட்­டிக்­காட்ட வேண்டும். என்­னென்ன திருத்­தங்கள் தேவை?, எதிர்க்­கட்­சி­களின் புதிய யோச­னைகள் என்ன? என்­பவை முன்­வைக்­கப்­பட வேண்டும்.

இதனை ஏற்­றுக்­கொள்ள நாம் தயா­ரா­கவே இருக்­கின்றோம். எதிர்­கட்­சி­க­ளுடன் இணக்­கப்­பாட்டு அர­சி­யலை முன்­னெ­டுப்­ப­தும் முழுப் பாரா­ளு­மன்­றத்­தையும் அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்­று­வதே எமது திட்­ட­மாகும்.

நாம­னை­வரும் இணைந்து புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­குவோம். அதே போன்று பழைய அர­சியல் சம்­பி­ர­தா­யங்­க­ளுக்குள் சிக்கிக் கொண்­டி­ருக்­காது, புதிய அர­சியல் சம்­பி­ர­தா­யத்தை உரு­வாக்கி புதி­ய­தொரு அர­சியல் பய­ணத்தை ஆரம்­பிப்போம்.

ஒதுக்­கீட்டு சட்ட மூலத்தில் குறிப்­பி­டப்­பட்ட செலவுத் தொகை­க­ளுக்கு அமை­யவே அனைத்து செல­வு­களும் முன்­னெ­டுக்­கப்­படும்.

வரவு – செலவுத் திட்டம் என்­பது சட்­டத்தை நிறை­வேற்­று­வ­தாகும். ஆனால் செல­வுகள் அனைத்தம் ஒதுக்­கீட்டு சட்ட மூலத்தின் ஊடா­கவே முன்­னெ­டுக்­கப்­படும். எனவே அரசு கல்­விக்­கா­கவும் சுகா­தா­ரத்­திற்­கா­கவும் ஒதுக்­கி­யுள்ள நிதி தொடர்பில் எதிர்க்­கட்­சிகள் வெளி­யிடும் தர­வுகள் தக­வல்­களில் உண்மைத் தன்மை கிடை­யாது.

ஜனா­தி­பதி மற்றும் நான் இச்சபையில் எமது பொரு­ளா­தார கொள்­கை­களை முன்­னெ­டுத்தோம். இதன் பின்னர் நிதி­ய­மைச்சர் இணக்­கப்­பாட்டு அரசின் முத­லா­வது வரவு- – செலவுத் திட்­டத்தை இச்­ச­பையில் முன்­வைத்தார்.

குடும்ப ஆட்சி, ஊழல், மோசடி, ஜன­நா­ய­கத்தை அடக்­கு­மு­றைக்­குள்­ளாக்கி, ஒழுக்­க­மற்ற சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்பி சர்­வா­தி­கா­ரத்தை நோக்கி பய­ணித்த பய­ணத்தை மாற்­றி­ய­மைக்கும் தேவை பெரும்­பா­லா­னோ­ருக்கு ஏற்­பட்­டது.

இப்­போ­ராட்­டத்­திற்கு நாம் முன்­னு­ரிமை வழங்கி ஜன­வரி 8 ஆம் திக­தியும் ஆகஸ்ட் 17 ஆம் திக­தியும் அர­சியல் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி இணக்­கப்­பாட்டு ஆட்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம். இதன்­மூலம் இன்று புதி­ய­தொரு பய­ணத்தை ஆரம்­பித்­துள்ளோம். இது கடி­ன­மா­னது.

சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மான அர­சி­ய­லுக்குள் சிக்கிக் கொண்­டி­ருப்­போ­ருக்கு இப் புதிய பய­ணத்­திற்கு முகம் கொடுப்­பது கடி­ன­மான காரி­ய­மாகும்.

நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை தீர்­மா­னிக்கும் முழு நாட்­டையும் விற்­றுத்­தீர்க்கும் வரவு – செலவுத் திட்டம் என பல்­வேறு கடு­மை­யான விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­படுகின்றன.

இவ்­வாறு விமர்­சிப்­ப­வர்­களை நாம் பகை­வர்­க­ளாக நோக்­க­வில்லை. அவர்கள் நாடு தொடர்பில் அல்ல தத்­த­மது கட்­சி­களின் இருப்பு தொடர்பில் கவனம் செலுத்­தியே விமர்­ச­னங்­களை முன்­வைக்­கின்­றனர்.

இறுதிமுடிவு எடுக்கவில்லை

ஊழியர் சேம நல நிதியம், நம்­பிக்கை நிதியம் இணைப்பு தொடர்­பாக இது­வ­ரையில் எது­வி­த­மான இறுதி முடிவும் எடுக்­க­பட வில்லை.

தொழிற்­சங்­கங்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­த­பட்­டன. இறுதித் தீர்­மானம் அவர்­க­ளுக்கு அறி­விக்­கப்­படும்.

இறுதி முடிவு அமைச்­ச­ரவை மற்றும் பாரா­ளு­மன்ற செயற்­கு­ழுவின் அனு­ம­திக்­க­மை­யவே எடுக்­கப்­படும். எனவே இவ்­வி­ட­யத்தில் அனைத்தும் வெ ளிப்­படைத் தன்­மை­யா­கவே முன்­னெ­டுக்­கப்­படும். இதன் மூலம் கடந்த ஆட்­சியில் ராஜ­பக் ஷ காலத்தில் இடம்­பெற்ற திருட்­டுக்­க­ளையும் ஊழல்­க­ளையும் நிறுத்­து­வதே எமது நோக்­க­மாகும்.

இவ்­வி­டயம் பேச்­சு­வார்த்தை மூலம் இணக்­கப்­பாட்டு மூலம் முன்­னெ­டுக்­கப்­படும். பழ­மை­யான அர­சியல் சம்­பி­ர­தா­யங்­களில் சிக்­கிக்­கொண்­டி­ருப்­போ­ருக்கு இதனை புரிந்து கொள்ள முடி­யா­துள்­ளது. இதி­லி­ருந்து மீண்டும் திறந்த மன­துடன் இதனை பார்க்க வேண்டும்.

புதிய பயணத்தை முன்னெடுப்போம்

ஆளும் கட்சி எதிர்­கட்சி என்ற பேதங்கள் இல்­லாமல் நாட்டின் அபி­வி­ருத்­திக்­காவும் முன்­னேற்­றத்­திற்­கா­கவும் எதிர்­கா­லத்­திற்­கா­கவும் புதிய பய­ணத்தை முன்­னெ­டுக்க இச் சந்­தர்ப்­பத்தை வழங்­கி­யுள்ளோம்.

முழுப் பாரா­ளு­மன்­றத்­தை­யுமே அர­சாங்­க­மாக செயற்­ப­டுத்­து­வ­தற்கு கண்­கா­ணிப்பு குழு­வொன்றை அமைப்­ப­தற்கும் அனைத்து நட­வ­டிக்­கை­களும் பூர­ணப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

பாரா­ளு­மன்­றத்தில் தற்­போ­துள்ள பொது வர்த்­தக அரச கணக்­காய்வு மற்றும் பொது முறைப்­பாட்டு செயற்­கு­ழு­வுக்கு மேல­தி­க­மான அரச நிதி மற்றும் மேலும் 16 விட­யங்­களின் கீழ் கண்­கா­ணிப்பு செயற்­கு­ழு­வொன்று ஏற்­ப­டுத்­தப்­படும்.

இதன் தலை­மைத்­துவம் எம்.பி.க்களுக்கே வழங்­கப்­படும். அனைத்து அமைச்­சு­களும் இந்த கண்­கா­ணிப்புச் சபைக்கு கீழ்­கொண்டு வரப்­படும். இதற்­க­மைய அரச நிர்­வா­கத்­திற்குள் இந்த பாரா­ளு­மன்றம் இணைக்­கப்­படும்.

தேசிய கண்­காய்வு சட்ட மூலம் தகவல் அறியும் சட்­ட­மூலம் அனைத்தும் விரைவில் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ள­தோடு உள்­ளூ­ராட்சி சபை தேர்­தல்­களின் போது பெண்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை 25 வீதம் அதி­க­ரிப்­ப­தற்­கான திருத்­தங்­களும் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

அபி­வி­ருத்­தி­களை கண்­கா­ணிப்­ப­தற்­காக இணைப்பு கண்­கா­ணிப்புக் குழு அமைக்­கப்­படும்.கடந்த காலங்­களில் ஊட­கங்கள் அடக்­கு­மு­றைக்­குள்­ளாக்­கப்­பட்­டன. ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொலை செய்­யப்­பட்­டார்கள். காணாமல் போனார்கள். இதனால் பலர் வெளி­நா­டு­க­ளுக்கு சென்­றனர். சிலர் அமை­தி­யா­னார்கள். சிலர் அடங்கிப் போனார்கள்.

ஆனால் இன்று முழு சமூ­கமும் அச்­ச­மின்றி வாழும் நிலை ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. கடத்­தல்கள் இல்லை. வெள்ளை வான் இல்லை. அழுத்­தங்கள் கிடை­யாது.

அடங்கிப் போன ஊட­க­வி­ய­லா­ளர்கள் இன்றும் தமது பணியை “அடக்­கியே” முன்­னெ­டுக்­கின்­றனர்.

நிதி­ய­மைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை முன்­வைத்தோர் அர­சி­ய­ல­மைப்பை முழு­மை­யாக வாசிக்­கா­த­வர்கள். ஏனென்றால் வரவு –செலவுத் திட்டம் தோற்றால் அரசு வீழ்ந்­து­விடும். உர­மா­னி­யத்­துக்கும், மாண­வர்­க­ளுக்­கான சீரு­டை­க­ளுக்­கான வவுச்சர் வழங்­கப்­ப­டு­வது அதனை இல்­லா­தொ­ழிற்­ப­தற்­காக அல்ல.

2016 ஆம் ஆண்­ட­ளவில் வரிகள் பொரு­ளா­தா­ரத்தில் ஸ்திர­மின்மையை உரு­வாகும். அமெ­ரிக்­காவை விடுத்து ஏனைய நாடு­களின் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி வேகம் குறைந்­துள்­ளது. இதன் தாக்கம் இலங்­கை­யையும் பாதித்­துள்­ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்­க­ர­வா­தி­களின் நட­வ­டிக்­கை­யினால் மத்திய கிழக்கில் ஸ்திரமில்லா நிலையேற்பட்டால் அது இலங்கையை பாதிக்கும்.

இதனை கருத்தில் கொண்டு அவசரத்தின் போது முகம் கொடுப்பதற்கான முன்னேற்பாடாக சர்வதேச நாணய நிதியத்துடன் வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளது.

எனவே அரசியல் நோக்கங்களை முதன்மைப் படுத்தி செயல்படுவதா? இல்லாவிட்டால் நாட்டை அபிவிருத்தி செய்து முன்னோக்கிச் செல்வதா? என்பதை தீர்மானிக்க வேண்டும்.

2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் இடம்பெற வுள்ளது. இதன்போது நாமனைவரும் கட்சிகளுக் காக அர்ப்பணிப்பு செய்தவர்களாக மக்களிடம் செல்லாது, நாட்டை கட்டியெழுப்ப அர்ப்பணிப்பு செய்த

கட்சிகளின் உறுப்பினர்களாக மக்கள் மத்தியில் செல்ல வேண்டும்.

இந்த உயரிய கொள்கைகள் ஒன்றுபடுமாறு உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41