சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் பேஸ் அப் செயலியில், பயன்படுத்துபவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் எப்.பி.ஐ புலனாய்வு பிரிவினர் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளவேண்டும் என அமெரிக்க செனட் சபையின் சிறுபான்மை தலைவர் சக் ஷுமர் தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் கவனம் பெற்ற பேஸ் அப் எனும் செயலி, சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் மத்தியில் தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது.
சமகால புகைப்படங்களை வயதான தோற்றத்திலும் இளமையான தோற்றத்திலும் இந்த செயலி உடனுக்குடன் மாற்றிக்காட்டுவதால் இதைப் பயன்படுத்தும் பயனர்களிடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளது.
இந்நிலையில் இச்செயலி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவரும், அமெரிக்காவின் செனட் சபை சிறுபான்மை தலைவருமான சக் ஷுமர் , பேஸ் அப் செயலியால் தனி நபர் தகவல்கள் திருடப்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தயாரிப்பான இந்த செயலியை அமெரிக்காவைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்துவதால் தேசப் பாதுகாப்பிற்கும்கூட அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், இந்த செயலி குறித்து எப்.பி.ஐ புலனாய்வு பிரிவு மற்றும் எப்.டி.சி ஆகியவை முறைப்படி ஆய்வு மேற்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM