நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்று கரையொதுங்கிய சம்பவம் காலியில் இடம்பெற்றுள்ளது.
' ஸ்ரீலங்கன் குளோரி ' எனப்படும் கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளாகிய நிலையில் கரையொதுங்கியுள்ளது. காலி கடற்பிரதேசத்தின் ஹுனவடுன்ன - ருமஸ்வெல எனும் இடத்திலேயே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி துறைமுகத்தை நோக்கி சென்ற சரக்கு கப்பல் ஹுனவடுன்ன கடற்பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இது தொடர்பில் கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுரு சூரிய பண்டாரவிடம் வினவிய போது ,
' ஸ்ரீலங்கன் குளோரி ' சரக்கு கப்பலொன்றாகும். இதில் கப்பலுக்கு பயன்படுத்தப்படும் சுமார் 15 தொன் எரிபொருள் காணப்படுகிறது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இந்த கப்பலில் இருந்த 9 பேரும் கடற்படையினரால் நேற்று வெள்ளிக்கிழமை பாதுகாப்பாக மீட்க்கப்பட்டுள்ளனர்.
எனினும் இந்த கப்பலில் ஏதேனும் சிதைவுகள் ஏற்பட்டால் அதிலிருக்கும் எரிபொருள் கசிவதோடு, அது கடல் நீரில் கலப்பதற்காக வாய்ப்பு இருக்கிறது. இதனால் எவ்வாறு பாதுகாப்பான முறையில் கப்பலை மீட்பது என்பது குறித்து கடற்படை ஆராய்ந்து வருகிறது என்று தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM