ஜனாதிபதியை நாம் தனித்து சந்திப்போம் : கூட்டத்தில் பங்கேற்காமைக்கான காரணத்தை வெளிப்படுத்தினார் மாவை

Published By: R. Kalaichelvan

19 Jul, 2019 | 11:10 AM
image

(ஆர்.யசி)

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் முக்­கி­ய­மான சில உறுப்­பி­னர்கள்  வெளிப்பிர­தே­சங்­களில் உள்ள கார­ணத்­தி­னாலும் வேறு சில முக்­கிய கார­ணங்­க­ளுக்­கா­கவும் ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பில்  கலந்­து­கொள்­ள­வில்லை என இலங்கை தமி­ழ­ரசு கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார்.

கன்­னியா பிள்­ளையார் கோவில் விவ­காரம் குறித்து ஜனா­தி­ப­தி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்த தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்தும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினர் ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பில் கலந்­து­கொள்­ள­வில்லை. இது குறித்து வின­வி­ய­போதே அவர் இதகை குறிப்­பிட்டார். 

 மேலும் கல்­முனை வடக்கு  பிர­தேச செய­லக விவ­காரம் குறித்து கோடிஸ்­வரன் எம்.பிக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அவ­ரையும் கலந்­து­கொள்ள வேண்டாம் என கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்­தி­யுள்­ளது. 

  இது தொடர்பில் இலங்கை தமி­ழ­ரசு கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா  குறிப்­பி­டு­கையில், 

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் முக்­கி­ய­மான சில உறுப்­பி­னர்கள்  வெளிப் பிர­தே­சங்­களில் உள்ள கார­ணத்­தி­னாலும் வேறு சில முக்­கிய கார­ணங்­க­ளுக்­கா­கவும் தாம் கலந்­து­கொள்­ள­வில்லை. 

இந்த சந்­திப்பு நேற்று இடம்­பெற்­றது. ஆனால் நாம் கலந்­து­கொள்­ள­வில்லை. தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினர் மாத்­திரம் ஜனா­தி­ப­தியை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்த கோரிக்கை விடுத்­துள்ளோம். அனே­க­மாக அடுத்த  பாரா­ளு­மன்ற அமர்­வு­களில் போது அல்­லது  அந்த வாரத்தில் ஏதேனும் ஒரு நாளில் நாம் ஜனா­தி­ப­தியை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்த வாய்ப்­புகள் உள்­ளது. 

அதேபோல் கல்­முனை வடக்கு பிர­தேச செய­லக விவ­காரம் குறித்தும் அமைச்சர் வஜிர அபே­வர்­தன மற்றும் கூட்­ட­மைப்பின் கோடீஸ்­வரன் எம்.பி ஆகி­யோரை சந்­திக்­கவும் ஜனா­தி­பதி அழைப்பு விடுத்­தி­ருந்தார். ஆனால் இது குறித்து இப்­போது ஒரு தீர்­மானம்  எட்­டப்­பட்­டுள்­ளது. புதிய கணக்­காய்­வாளர் நிய­மிக்கப் பட்­டுள்ள நிலை­யிலும் முதற்­கட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள நிலை­யிலும் ஜனா­தி­ப­தியை இப்­போது  சந்திக்க வேண்டிய அவசியம் இல்லையென நாம் நினைக்கின்றோம். ஆகவே கோடீஸ்வரன் எம்.பி இப்போது சந்திக்க தேவையில்லை என நம் கூறியுள்ளோம்.  அவரும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31