(எம்.மனோசித்ரா)
திருகோணமலை - உப்பாரு பிரதேசத்தில் கடற்படையினரால் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இதன் போது சட்ட விரோத மீன்பிடிக்கு பயன்படுத்தப்பட்ட மீன்பிடி படகுகள், தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் 15 கிலோ கிராம் மீன் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேநகபர்கள் 20 - 46 வயதுக்கு இடைப்பட்ட, கின்னியா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களிடமிருந்து மீட்க்கப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை கடல்வள பாதுகாப்பு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM