(நா.தினுஷா)
சேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று மாலை அலரிமாளிகையில் இடம்பெற்றது.
இதன் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த கலந்துரையடலில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல மற்றும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டனர்.
இந்த சந்திப்பில் சட்டத்தரணிகள் சங்கத்தினர் சோபா உடன்படிக்கை தொடர்பிலும், மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் மற்றும் காணி விசேட திருத்தச்சட்டம் குறித்து பிரதமரிடம் கலந்துரையாடினர்.
சோபா உடன்படிக்கையினூடாக அமெரிக்கா இராணுவத்தை இலங்கைக்கு கொண்வர அரசாங்கம் முயற்சித்து வருகின்றதாகவும் காணி விசேட திருத்த சட்டம் மற்றும் மிலேனியம் சவால்கள் கூட்டு ஒப்பந்தத்தினூடாக நாட்டின் காணி வளத்தையும் அமெரிக்காவுக்கு வழங்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக கடந்த காலங்களில் எதிரணியினர் குற்றுஞ்சுமத்தி வந்தனர்.
இந்த நிலைமையிலேயே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினர் பிரதமருடன் பேச்சுவார்ததை நடத்தியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM