கீத் நொயார் கடத்தல் விவகாரம் ; லலித் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு ! 

Published By: Vishnu

18 Jul, 2019 | 05:58 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

த நேஷன் பத்திரிகையின் முன்னாள் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டமை, ஆயுதத்தால் தாக்கப்பட்டமை, கொலை செய்ய முயற்சிக்கப்பட்டமை தொடர்பில் ஒன்பதாவது சந்தேக நபரான இராணுவ புலனாய்வுப் பிரிவின் கோப்ரல் லலித் ராஜபக்ஷ இன்று கல்கிசை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். 

ஏற்கனவே ஊடகவியலாளர் உபாலி தென்னகோன் தாக்குதல் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் அவர் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக, கண் கண்ட சாட்சி ஒன்றின் அடிப்படையில் அவரை   ஊடகவியலாளர் கீத் நொயார் விவகாரத்தில் சந்தேக நபராக செய்ததாக சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை குறித்த விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா நீதிமன்றுக்கு அறிவித்தார்.

இதனையடுத்து கல்கிசை மேலதிக நீதிவான் சி.எச்.வீ.லியனகே சந்தேக நபரான லலித் ராஜபக்ஷவை எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் அன்றைய தினம் அடையாள அணி வகுப்புக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அறிவித்தல் விடுத்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28