(எம்.எப்.எம்.பஸீர்)
த நேஷன் பத்திரிகையின் முன்னாள் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டமை, ஆயுதத்தால் தாக்கப்பட்டமை, கொலை செய்ய முயற்சிக்கப்பட்டமை தொடர்பில் ஒன்பதாவது சந்தேக நபரான இராணுவ புலனாய்வுப் பிரிவின் கோப்ரல் லலித் ராஜபக்ஷ இன்று கல்கிசை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.
ஏற்கனவே ஊடகவியலாளர் உபாலி தென்னகோன் தாக்குதல் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் அவர் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக, கண் கண்ட சாட்சி ஒன்றின் அடிப்படையில் அவரை ஊடகவியலாளர் கீத் நொயார் விவகாரத்தில் சந்தேக நபராக செய்ததாக சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை குறித்த விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா நீதிமன்றுக்கு அறிவித்தார்.
இதனையடுத்து கல்கிசை மேலதிக நீதிவான் சி.எச்.வீ.லியனகே சந்தேக நபரான லலித் ராஜபக்ஷவை எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் அன்றைய தினம் அடையாள அணி வகுப்புக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அறிவித்தல் விடுத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM