தேயிலையில் கலப்படம் செய்து மாட்டடிக்கொள்ளவேண்டாம் : நவீன்

Published By: R. Kalaichelvan

18 Jul, 2019 | 05:40 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்) 

தேயிலையில் கலப்படம் செய்து மாட்டடிக்கொள்ளவேண்டாம். அவ்வாறானவர்களுக்கு எந்தவகையிலும் மன்னிப்பு வழங்க மாட்டோம். அத்துடன் தேயிலையில் சீனி கலப்படம் செய்த13 தொழிற்சாலைகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை தேயிலை சபையில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தேயிலையில் எந்தவகையான கலப்படங்களையும் மேற்கொள்ளவேண்டாம் என தேயிலை தொழிற்சாலைகளுக்கும் தனி நபர்களுக்கும் தெரிவித்திருக்கின்றோம். 

அதுதொடர்பான சிவப்பு அறிக்கையையும் காண்பித்திருக்கின்றோம். அதனால் இந்த வேலையை யாரும் செய்யவேண்டாம் அவ்வாறு செய்து மாட்டிக்கொண்டால் அவர்களுக்கு நானோ தேயிலை சபையோ எந்த மன்னிப்பையும் வழங்கப்போவதில்லை. 

அத்துடன் இவ்வாறானவர்களுக்காக யாரும் அரசியல் அழுத்தத்தையும் பிரயோகிக்கவேண்டாம். இதனால் எமது தேயிலையின் தரமே பாதிக்கப்படுகின்றது என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48