(செ.தேன்மொழி)
இரத்தினபுரி - பெல்மடுள்ள பகுதியில் கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் வேட்டைக்காக இந்த துப்பாக்கியை தயார் செய்துக் கொண்டிருந்த போதே துப்பாக்கி திடீர் என்று வெடித்துள்ளதாக பெல்மடுள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
பெல்மடுள்ள- இந்திகெட்டி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பிரியந்த புஷ்ப விஜேசிங்க என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவதினத்தன்று உயிரிழந்த நபர் மதுபோதையில் இருந்துள்ளார். இதன்போது அவர் தனது மனைவியுடன் முரண்பாடுகளையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். பின்னரே வேட்டைக்காக கட்டுத் துப்பாக்கியை தயாரித்துள்ளார். மழையில் நனைந்திருந்த துப்பாக்கியை முற்றத்தில் மூட்டப்பட்டிருந்த தீயில் உளரவைக்க முற்பட்டுள்ளார். இதன்போதே துப்பாக்கி திடீரென வெடித்துள்ளது.
இதனை தொடர்ந்து படுகாயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் போது வழியிலேயே உயிரிழந்துள்ளார். இவர் சில காலங்கள் இராணுவத்தில் சேவையாற்றியுள்ளதாகவும் இவருக்கு 7 வயதுடைய பெண் பிள்ளையொன்று இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் காவத்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பெல்மடுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM