ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தின் தலைவராக ஜேர்மனியைச் சேர்ந்த உர்ஸுலா வொன் டெர்லேயன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவர் இதன் மூலம் ஐரோ ப்பிய ஒன்றிய ஆணையகத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் என்ற பெருமையைப் பெறுகிறார்.
மைய வலது சாரி பாதுகாப்பு அமைச்சரான அவர் மேற்படி ஆணையகத்தின் தலைவராக பணியாற்றும் ஜீன் கிளோட் ஜங்கரின் பதவி நிலைக்கு எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி நியமிக்கப்படவுள்ளார்.
அவருக்கு ஆதரவாக ஐரோப்பிய பாராளுமன்றத்தின் அரைப்பங்கிற்கு அதிகமான உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களை வரைவதுடன் ஐரோப்பிய ஒன்றிய சட்ட விதிகளை நடைமுறைப்படுத்தவும் தேவைப்படும் பட்சத்தில் அங்கத்துவ நாடுகள் மீது தண்டப் பண விதிப்பை மேற்கொள்ளவும் இந்த ஆணையகத்தி ற்கு அதிகாரமுள்ளது. வாக்கெடுப்பிலான வெற்றியையடுத்து உர்ஸுலா உரையாற் றுகையில்இ ''நீங்கள் என் மீது வைத்த நம் பிக்கை ஐரோப்பா மீது வைத்த நம்பிக் கையாகும்'' எனத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM