காலநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் தண்ணீர் பற்றாக்குறையால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.
பூமி வெப்பமயமாதல் அதிகரிப்பு, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசடைதல், காடுகள் அழிப்பு போன்ற பல்வேறு காரணிகளால் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ‘ஹை அண்ட் டிரை: கிளைமேட் சேஞ்ச், வாட்டர் அண்ட் தி எகானமி’ என்ற தலைப்பில் ஆய்வறிக்கையை உலக வங்கி கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
அதில், உலகளவில் அதிகரித்து வரும் மக்கள் தொகை, நகரமயமாக்கம் போன்றவற்றினால் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது.
இதனால், தண்ணீர் பற்றாக்குறை பொரு ளாதார வளர்ச்சியை பாதிக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறிவுள்ளது. உலகளவில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்றும் உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் எச்சரித்துள்ளார்.
நீராதாரங்களை சரியாக கையாளும் திட்டங்களை உலக நாடுகள் செயல்படுத்தாவிட்டால், மக்கள் தொகை அதிகம் கொண்ட சில நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பல வருடங்களுக்கு கடுமையாக பாதிக்கும் என குறித்த அறிக்கையில் சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM