உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இறுதி ஓவரில் களத்தடுப்பின் போது மார்ட்டின் குப்தில் எறிந்த பந்துக்கு 6 ஓட்டங்கள் வழங்கியது தவறு என முன்னாள் நடுவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஆட்டத்தில் கடைசி ஓவரில் நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் வீசிய 4ஆவது பந்தில் பென் ஸ்டோக் 2 ஓட்டங்கள் ஓடிய போது நியூஸிலாந்து பீல்டர் மார்ட்டின் குப்தில் ஸ்டம்பை நோக்கி பந்தை எறிந்தார். அந்தப் பந்து கிரீசுக்குள் விழுந்த பென் ஸ்டோக்ஸ் துடுப்பு மட்டையில் பட்டு பவுண்டரியைத் தாண்டியது. இதனால் அந்தப் பந்தில் 6 ஓட்டங்களை நடுவர் வழங்கினார். கள நடுவர்கள் குமார் தர்மசேன(இலங்கை), மாரிஸ் (தென்னாபிரிக்கா) ஆகியோர் இந்த விஷயத்தில் தவறு இழைத்து விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அந்தப் பந்தில் 5 ஓட்டங்கள் தான் வழங்கியிருக்க வேண்டும். 5 ஓட்டங்கள் வழங்கியிருந்தால் ஆட்டம் டை ஆக வாய்ப்பு இருந்திருக்காது.
இது குறித்து முன்னாள் சர்வதேச நடுவர் சிமோன் டபெல் (அவுஸ்திரேலியா) கருத்துத் தெரிவிக்கையில்,
"இங்கிலாந்து அணிக்கு அந்தப் பந்தில் 5 ஓட்டங்கள் தான் வழங்கியிருக்க வேண்டும். 6 ஓட்டங்கள் வழங்கியிருக்கக் கூடாது. இது தெளிவான தவறு. கணிப்பதில் தவறு நடந்துள்ளது" என்றார். முன்னாள் சர்வதேச நடுவர் ஹரிஹரன் (இந்தியா) அளித்த பேட்டியில், "நியூசிலாந்து அணியின் உலகக் கிண்ண வாய்ப்பை நடுவர் குமார் தர்மசேன கொன்று விட்டார். அந்தப் பந்துக்கு 5 ஓட்டங்கள் தான் வழங்கி இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இது குறித்து ஐ.சி.சி. செய்தித் தொடர்பாளரிடம் கேட்ட போது, "நடுவர்கள் விதிமுறையின் படி தான் முடிவு எடுக்கிறார்கள். இது குறித்து நாங்கள் கருத்து சொல்ல முடியாது" என்று பதிலளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM