(ஆர்.விதுஷா)
சுகாதார அமைச்சினுள் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்படவேண்டும் எனவும், அதன் மூலமாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த கோரிக்கையை முன்வைத்த அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் அளுத்கே தொடர்ந்து கூறியதாவது,
அமைச்சர் ராஜிதசேனாரத்னவினால் சுகாதார அமைச்சினுள் இடம்பெறும் ஊழல் மோசடிகள் தொடர்பில் 12 அமைப்பினருக்கு முறைப்பாடுகளை அளித்துள்ளோம். அந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆதாரப்பூர்வமானவையாகும்.
இவ்வாறான குற்றச்செயல்களை புரிந்துள்ள சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை விசாரணைக்கு உட்படுத்துவதற்காக பாராளுமன்றத்தில் தெரிவுக்குழு அமைக்க சபாநாயகர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM