தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச செல்போன் வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருக்கிறது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை கட்சியின் பொதுச்செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டார்.
அதில்,
- அரசு ஊழியர்களுக்கு வீடுகட்ட கடனுதவி ரூ.40 இலட்சமாக உயர்த்தப்படும்.
- பேறுகால விடுப்பு 9 மாத காலமாக உயர்த்தப்படும்.
- பேருந்து நிலையங்கள், பூங்காக்களில் இலவச வைஃபை வசதி விரிவுபடுத்தப்படும்.
- மகளிருக்கு பயிற்சியுடன் ஆட்டோ மானியம் வழங்கப்படும்.
- பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில் காலை சிற்றுண்டி சேர்க்கப்படும்.
- குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச செல்போன் வழங்கப்படும்.
- தாலிக்கு தங்கம் 4 கிராமில் இருந்து ஒரு பவுனாக உயர்த்தி வழங்கப்படும்.
- பொங்கலுக்கு கோ-ஆப் டெக்ஸில் துணிகள் வாங்க 500 ரூபாய் மதிப்பிலான கிப்ட் கூப்பன் வழங்கப்படும்.
- கூட்டுறவு வங்கி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
- மகளிருக்கு ஸ்கூட்டர் வாங்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
- அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்படும்.
- பி.ஆர்.அம்பேத்கர் பவுண்டேசன் ரூ.5 கோடி செலவில் அமைக்கப்படும்.
- முதியோர் உதவித் தொகை ரூ.1500 ஆக உயர்த்தப்படும்.
- தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும்.
- புதிய கிரானைட் கொள்கை அமைக்கப்படும்.
- வழக்கறிஞர் சேம நல நிதி ரூ.7 இலட்சமாக உயர்த்தப்படும்.
- நெசவாளர்களுக்கு 200 யூனிட் வரை மின்சார கட்டணம் கிடையாது.
- அரசு கேபிள் பயன்படுத்துவோருக்கு இலவச செட் ஆப் பாக்ஸ் வழங்கப்படும்.
- தமிழகத்திற்குள் ஓடும் நதிகள் இணைக்கப்படும். என பல வாக்குறுதிகள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM