(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டு வருவதற்கான ஆளுமை ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடையாது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அவ்வாறு குற்றப்பிரேரணை கொண்டு வருவதாகக் கூறுபவர்களுக்கு அமைச்சர் சஜித் பிரேமதாச மரண தண்டனைக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளமை சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் தற்போது ஐக்கிய தேசிய கட்சிக்குள் உள்ளக பிரச்சினைகள் பல காணப்படுகின்றன. அவ்வாறான உள்ளக பிரச்சினைகளின் கூட தலையிட முடியாதவர்கள் தான் பாராளுமன்ற பின்வரிசை உறுப்பினர்கள். இந்நிலையில் அவர் எவ்வாறு ஜனாதிபதிக்கு எதிராகச் செயற்பட முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் 23 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை கொண்டு வரவுள்ளதாகத் தெரிவித்துள்ளமை குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM