(எம்.மனோசித்ரா)
இலங்கை பாதுகாப்புதுறையுடன் ஒத்துழைத்து பிரான்ஸ் அரசாங்கம் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதாகத் தெரிவித்த சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம, இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலைப் போன்று உலகின் வேறு ஏதேனும் பாகத்தில் நடந்தாலும் அதனை வெற்றி கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பிரான்ஸ் தேசிய தின நிகழ்வு நேற்று கொழும்பு - ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரான்ஸ் தேசிய தினத்தையிட்டு இங்கு வருகை தந்துள்ள அனைவரையும் வரவேற்பதில் பெறுமகிழ்ச்சி அடைகின்றேன். பிரான்சும் இலங்கையும் நீண்ட கால இருதரப்பு உறவை கொண்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் போல பிரான்ஸிலும் 2017 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்றது. இவ்வாறான தாக்குதல் இலங்கையில் நடந்தாலும், பிரான்ஸில் நடந்தாலும் அல்லது உலகின் வேறு ஏதேனும் பாகத்தில் நடந்தாலும் அதனை வெற்றி கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
இலங்கையை ஆசியாவில் வளம் மிக்க ஒரு நாடாக மாற்ற நாம் அனைவரும் முன்வர வேண்டும். 1948 ஆம் ஆண்டு ஒக்டோபர் காலப்பகுதியில் இருந்து 71 வருடங்களாக இலங்கை பிரான்ஸ் இருதரப்பு உறவு சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM