மாற்றமடைந்து வரும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பாதுகாப்பானதும் செளகரியமானதும் இலகுவானதுமான வங்கிச்சேவை யினை உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவதாக செலான் வங்கியின் சர்வதேச நிதிச் சேவையின் சிரேஷ்ட முகாமையாளர் எம்.டி.அஸ்கர்அலி தெரிவித்தார்.
வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அச்செவ்வியின் விபரம் வருமாறு,
கேள்வி: கடந்த வருடம் வெளிநாட்டு பணமனுப்புதல் வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கான காரணம் என்னவென கூறமுடியுமா?
பதில்: மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் நிமித்தமாக செல்வோரின் தொகையில் ஏற்பட்ட வீழ்ச்சியானது கடந்த வருட பணமனுப்புதலில் வீழ்ச்சியை ஏற்படுத்த காரணமாக அமைந்துள்ளது.
கேள்வி: வெளிநாடுகளிலிருந்து பணமனுப்புதலை அதிகரிக்க செலான் வங்கி எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.?
பதில்: வெளிநாட்டு பணமனுப்புதல் நாட் டின் அந்நிய செலாவணியில் கணிசமான பங்களிப்பினை நல்கிவருகிறது எனலாம். எனவே வெளிநாட்டு பணமனுப்புதலை அதிகரிப்பதன் ஊடாக நாட்டின் அந்நிய செலாவணியை உயர்த்த முடியும்.
அதற்கான பல்வேறு செயற்பாடுகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். அதாவது வெளிநாட்டு பணமனுப்புதலை அதிகரிப்பதை இலக்குவைத்து நாம் பிரசார வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். துரிதமாகவும் குறைந்த சேவை கட்டணங்களுடனும் பணமனுப்புதலுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.
வெளிநாட்டுகளிலிருந்து பணம் அனுப்புகின்றவர்களுக்கு பல்வேறு பரிசில்களை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றோம். இந்த விடயம் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் எம்மவர்களுக்கு உதவும் முகமாக எமது வங்கி அதிகாரிகளை அந்நாடுகளில் பணிக்கமர்த்தியுள்ளோம். வெளிநாட்டு பணமனுப்புதலை அதிகரிப்பதற்கு இவ்வாறான பல்வேறு வேலைத்திட்டங்களை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
கேள்வி: வெளிநாட்டு பணமனுப்புதலுக் கென விசேடமான அட்டை முறையொன்றை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதே. அது பற்றி சற்று தெளிவுபடுத்த முடியுமா.?
பதில்: ஆம் இது Remittances அட்டை என அழைக்கப்படுகிறது. இந்த அட்டையை பயன் படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் பல்வேறு நன்மையடைகின்றனர். இந்த அட்டையினை வைத்திருப்பவருக்கு எந்தவொரு நாட்டிலிருந்தும் எந்த சந்தர்ப்பத்திலும் பணத்தினை அனுப்பலாம்.
இந்த அட்டையினை வைத்திருப்பவர் எந்தவொரு வங்கியிலும் கணக்கினை வைத்திருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது.
தமது குறித்த அட்டைக்கு வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பப்படும்போது குறித்த அட்டையினை பயன்படுத்தி பணத்தினை பெறலாம். இந்த அட்டைக்கு அனுப்பப்படும் பணத்தின் முழுத்தொகையினையும் எடுக்காமல் குறிப்பிட்ட ஒரு தொகையினை மட்டும் எடுத்தால் எஞ்சிய தொகைக்கு வட்டி வழங்கப்படும். இது மிகவும் பாதுகாப்பானதும் செளகரியமானதுமான ஒரு வழிமுறையாகும். இந்த அட்டையினை பொருட்கொள்வனவிற்கும் பயன்படுத்தலாம்.
காலை மாலை என இல்லாது எந்த சந்தர்ப்பத்திலும் குறித்த வங்கியிலோ அல்லது பணம் மீளப்பெறும் நிலையங்களிலோ அனுப்பிய பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் டொலராக அனுப்பினால் டொலராகவோ யூரோவாக அனுப்பினால் யூரோவாகவோ அல்லது ரூபாவிலோ பெற்றுக்கொள்ளும் வசதி இந்த அட்டையில் காணப்படுகிறது. அவசர தேவைக்கு அனுப்பிய பணத்தை உடனடியாக பெறமுடியவில்லை என்றால் அதில் பிரயோசனம் இல்லை. எமது இந்த புதிய அட்டையின் மூலம் அந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது. அதாவது வெளிநாட்டிலிருந்து அனுப்பிய பணத்தை துரிதமாக பெற்றுக்கொள்ளலாம். வெளிநாட்டு பணவனுப்புத லில் நாம் கூடுதல் கவனம் செலுத்திவருகின்றோம். வெளிநாடுகளிலிருக்கும் நம்ம வர்களுக்கு சிறந்த துரித சேவையினை வழங்கிவருகின்றோம். லண்டன், அமெரிக்கா கனடா மற்றும் மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் நாம் பலமான கட்டமைப்புடன் வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்றோம்.
கேள்வி: செலான் வங்கியின் Mobile Banking App பற்றி சற்று தெளிவுபடுத்த முடியுமா.?
பதில்: செலான் வங்கியின் Mobile Banking App இன் ஊடாக பல்வேறு நன்மைகள் காணப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் செலான் வங்கியின் App ஊடாக எந்தவொரு சூழலிலிருந்தும் தமது நிதிக்கொடுக்கல் வாங்கல்களை இலகுவாகவும் பாதுகாப்பாகவும் மேற்கொள்ள முடியும். தொழில்நுட்ப வளர்ச்சி இன்று சகல துறைகளிலும் தாக்கம் செலுத்தியுள்ளது. அதேபோன்று வங்கித் துறையிலும் அது பாரிய தாக்கம் செலுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மக்களுக்கு துரிதமானதும் பாதுகாப்பானதுமான சேவையினை வழங்குவதே எமது நோக்கமாக இருந்தது. அதற்கமையவே Mobile Banking App இனை நாம் அறிமுகப்படுத்தினோம். இந்த App இனை என்றொயிட் போன்கள் மற்றும் டெப்களில் பயன்படுத்தலாம். இந்த App அன் ஊடாக வங்கி கணக்கு மீதி வங்கியில் வைப்பிலிடப்பட்ட பணம் மற்றும் பெறப்பட்ட முழு விபரங்களையும் பெற்றுக்கொள்ளலாம். அதேபோன்று இலகுவாக கட்டணங்களை செலுத்தும் வசதியும் இந்த Mobile Banking Appஇன் ஊடாக காணப்படுகிறது. அதாவது நேரத்தை வீணடிக்காமல் பாதுகாப்பான முறையில் இருந்த இடத்தில் இருந்தவாறே மேற்கூறிய அனைத்தையும் செய்துகொள்ளும் வாய்ப்பு இந்த App இல் உள்ளது.
செலான் வங்கி எப்பொழுதுமே வாடிக்கை யாளர்களுக்கு செளகரியமான சிறந்த சேவை யினை வழங்குவதை குறிக்கோளாக கொண்டு செயற்பட்டு வருகிறது. அதாவது வங்கித் துறையில் விடுமுறை நாளான சனிக்கிழமை யில் வங்கியை திறந்து வாடிக்கையாளர்களு க்கு மேலதிக சேவையினை முதல் முதலில் அறிமுகம் செய்தது நாமே.
அதேபோன்று தொழில்நுட்ப வசதிகள் குறைந்த காலத்தி லேயே வங்கிக் கிளைகளுக்கிடையில் பணத் தினை வைப்பிலிடல் மற்றும் மீளப்பெறல் போன்ற சேவைகளை முதல் முதலில் செலான் வங்கியே இலங்கையில் ஆரம்பித் தது எனவும் அவர் தெரிவித்தார்.
- எம். நேசமணி
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM