ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து முதன் முறையாக சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
இப் போட்டியின் வெற்றிக்கு இங்கிலாந்து அணியின் சகல துறை ஆட்டக்காரர் பென் ஸ்டோக் முக்கிய காரண கருத்தாவாக அமைந்துள்ளார்.
லண்டன் லோர்ட் மைதானத்தில் நேற்றைய தினம் ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை குவித்தது.
242 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் முதல் 4 விக்கெட்டுக்களும் 86 வீழ்த்தப்பட்டது.
எனினும் பென்ஸ்டோக் மற்றும் பட்லர் ஜோடி சேர்ந்தாடி இங்கிலாந்தின் வெற்றிக்காக பெரிதும் பாடுபட்டனர். குறிப்பாக பென்ஸ்டோக் இறுதி வரை ஆட்டமிழக்காதிருந்தார்.
இறுதி ஓவருக்கு 15 ஓட்டங்கள் என்ற நிலை வந்தபோது அந்த ஓவரில் பென் ஸ்டோக் முதல் இரு பந்துகளில் ரன்களை பெற தவறினார். எனினும் அவர் அதன் பின் பின்னர் ஒரு ஆறு ஓட்டத்தை விளாசித் தள்ள 50 ஓவர் முடிவில் போட்டியும் சமநிலையில் முடிவடைந்தது.
மொத்தமாக இந்த இன்னிங்கிஸில் பென் ஸ்டோக் 98 பந்துகளை எதிர்கொண்டு 5 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் அடங்கலாக 84 ஓட்டத்தை ஆட்டமிழக்காது பெற்றார்.
அத்துடன் சூப்பர் ஓவரிலும் அவர் 3 பந்துகளை எதிர்கொண்டு 8 ஓட்டங்களை பெற்று அணியின் பெற்றிக்கு பெரும் பங்காற்றியிருந்தார்.
இதேவேளை கடந்த 2016 ஆம் ஆண்டு கொல்கத்தாவின், எடன்கார்டின் மைதானத்தில் நடைபெற்ற சர்வதேச இருபதுக்கு - 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியுடனான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியமைக்கு பென் ஸ்டோக் முக்கிய புள்ளியாக காணப்பட்டார்.
காரணம் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் வெற்றிக்கு இறுதி ஒவருக்கு 19 ஓட்டங்கள் என்ற நிலையிருக்க, அந்த ஓவருக்காக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட பென் ஸ்டோக் முதல் நான்கு பந்துகளிலும் 4 ஆறு ஓட்டங்களை வாரி வழங்கியிருந்தார்.
இந் நிலையில் நேற்றைய ஆட்டத்தின் மூலம் அந்த தோல்விக்கு மாற்றீடாக நியூஸிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்தின் 44 வருட உலகக் கிண்ண கனவை நனவாக்கினார்.
மொத்தமாக இந்தத் தொடரில் பென் ஸ்டோக் 11 போட்டிகளில் விளையாடி 5 அரைசதங்கள் உள்ளடங்கலாக 468 ஓட்டங்களை குவித்துள்ளார்.
* அதிகபடியான ஓட்டம் - 89
* நான்கு ஓட்டம் - 38
* சிக்ஸர்கள் - 11
* பிடியெடுப்புகள் - 03
* கைப்பற்றிய விக்கெட் - 07
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM