எவ்வாறு உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது இங்கிலாந்து ; பவுண்டரிகளே தீர்மானித்தன !

Published By: Priyatharshan

15 Jul, 2019 | 11:14 AM
image

இங்கிலாந்தின், லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் நியூசிலாந்தை வீழ்த்தி கிண்ணத்தை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

உலகக்கிண்ணத்தை இங்கிலாந்து அணி பவுண்டரி எண்ணிக்கையின் அடிப்படையிலேயே கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்தில் இடம்பெற்றுவந்த 12 ஆவது உலகக் கிண்ணதொடரின் இறுதிப் போட்டி நேற்றையதினம் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது.

இப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் பதிலுக்கு வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி 242 ஓட்டங்களைப் பெற்றால், உலகக்கிண்ணத்தை கைபற்றிவிடலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரர்கள் ஜேசன் ரோய் 17 ஓட்டங்களுடனும் ஜோனி பேர்ஸ்டோவ் 36 ஓட்டங்களுடனும் வெளியேறினர். 

பின்னர் வந்த ஜோ ரூட் 7 ஓட்டங்களுடன்ம் மோர்கன் 9 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 

அடுத்து வந்த பட்லர், ஸ்டோக்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடினர். இருவரும் அரைச் சதம் கடந்த நிலையில் பட்லர் 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.  இறுதியில் வெற்றி பெற இறுதி ஓவரில் 15 ஓட்டங்கள் தேவை பட்ட நிலையில்  இங்கிலாந்து அணியால் 14 ஓட்டங்களை மாத்திரமேபெற்றதால் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

பின்னர் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது அதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 6 பந்துகளில் 15 ஓட்டங்களை பெற்றது. 

சுப்பர் ஓவரில் 16 ஓட்டங்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 6 பந்துகளில் 15 ஓட்டங்கள் அடித்தது. இதையடுத்து பவுண்டரிகள் எண்ணிக்கை அடிப்படையில் வெற்றி தீர்மாணிக்கப்பட்டது. 26 பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணிக்கு கிண்ணம் வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கிண்ணத்தை முதல் முறையாக இங்கிலாந்து அணி கைப்பற்றி சாதனை படைத்தது. 

எவ்வாறு சம்பியனானது இங்கிலாந்து

போட்டி 2 ஆவது முறையாகவும் சமநிலையாகும் பட்சத்தில் ஆட்டத்தில் அதிக பவுண்டரி அடித்த அணி வெற்றிபெற்ற அணியாக அறிவிக்கப்படும். 

அந்த வகையில் நியூசிலாந்தை விட இங்கிலாந்து அணி 6 பவுண்டரிகள் கூடுதலாக அடித்திருந்ததால் இங்கிலாந்து உலக சாம்பியனாக அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியில் சுப்பர் ஓவரையும் சேர்த்து இங்கிலாந்து அணி 24 பவுண்டரிகளையும் நியூசிலாந்து அணி 14 பவுண்டரிகளையும் பெற்றுக்கொண்டன.

44 ஆண்டு கால உலகக்கிண்ண வரலாற்றில் இங்கிலாந்து உலகக் கிண்ணத்தை வெல்வது இதுவே முதல்முறையாகும். இந்த வெற்றியால் இங்கிலாந்து  முழுவதும் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.

 Images via Reuters

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35