பெற்றெடுத்த சிசுவை, குழிதோண்டி புதைத்துவிட்டு மரணமான தாய்: 3 பிள்ளைகளுடன் நிர்க்கதியான தந்தை - கொட்டகலையில் சம்பவம்

Published By: J.G.Stephan

14 Jul, 2019 | 12:05 PM
image

கொட்டகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை யுலிபில்ட் தோட்ட பகுதியில், புதைக்கப்பட்ட நிலையில், ஆண் சிசு ஒன்றின் சடலத்தை பொலிஸார் தோன்றி எடுத்துள்ளனர். அத்தோடு, குறித்த சிசுவின் தாயாரும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

ஹட்டன் நீதிமன்ற நீதவான் தலைமையில் விசாரணைகள் மேற்கொண்டதன் பின்னரே நேற்று(13.07.2019) குறித்த ஆண் சிசுவின் சடலம் மீட்கபட்டது. 

மேலும், குறித்த சிசுவின் தாய் திடீர் சுகயீனம் காரணமாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கபட்டுள்ள குறித்த தாயின் சடலத்தை சட்ட வைத்திய அதிகாரி பிரேத பரீசோதனை மேற்கொண்ட போதே இறந்த பெண்ணுக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக வைத்தியசாலையின் ஊடாக ஹட்டன் பொலிஸாருக்கு அறிவிக்கபட்டதை அடுத்து ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். 

கொட்டகலை யுலிபில்ட் தோட்ட பகுதிக்கு சென்ற பொலிஸார் குறித்த பெண் வீட்டின் அறையில் குழந்தை ஒன்றை பிரவேசித்து வீட்டின் பின்புறத்தில் குழி தோண்டி புதைத்துள்ளதாகவும், குறித்த பெண்ணுக்கு அதிக குருதி வெளியேறிதை அடுத்து குறித்த பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டும் செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

மேலும், குறித்த பெண்ணின் வீட்டின் அறையினுள் குறித்த பெண் அணிந்திருந்த இரத்த கறைகள் கொண்ட ஆடைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண்ணின் கணவர் கொழும்பு பகுதியில் தொழில் புரிந்து வருவதாகவும், 39 வயதுடைய 03 பிள்ளைகளின் தயாரான ஆர்.வசந்தகுமாரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த பெண்ணுக்கு 12, 07 ஆகிய வயதுகளில் இரண்டு பெண் பிள்ளைகளும் 05 வயதில் ஒரு ஆண் பிள்ளையும் இருப்பதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.  சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31