இஸ்லாமிய ஷரீஆ வங்கிச் சட்டங்களை உள்வாங்க வேண்டுமென மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை நுண்நிதியளிப்பு சட்ட மூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்;
நுண்நிதி அளிப்பு சட்ட மூலம் கொண்டு வரப்பட்டமைக்கு நாம் வரவேற்பளிக்கின்றோம். இலங்கை மத்திய வங்கிக்கு கீழ் நுண்நிதியளிப்பு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டாலும் அவை தமக்கு விரும்பியவாறே செயற்படுகின்றன. இதனால் சாதாரண பொது மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்கின்றனர்.
இவ்வாறான நிறுவனங்கள் முதலில் சாதாரண கிராமங்களை நோக்கியே வருகின்றன. சூட்சுமாக கடன்களை வழங்குகின்றன. அதன் பின்னர் அவர்களை கடன்காரர்களாக மாற்றி நெருக்கடிக்குள் தள்ளி விடுகின்றன. இதனால் சாதாரண பொது மக்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமைகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் இவ்வாறான நுண்நிதி கடன் வழங்கும் நிறுவனங்களினால் மூன்று பெண்கள் தற்கொலை செய்து கொண்ட துக்ககரமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான நிலைமைகளை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. அந்த நிலைமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டியது அவசியமாகின்றது. அதற்காக இவ்வாறான சட்ட மூலம் கொண்டு வந்திருப்பது வரவேற்கப்பட வேண்டியதாகும்.
விசேடமாக வட கிழக்கில் பல்வேறு வாழ்வாதார உதவிகளை, தேவைகளைக் கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் கட்டியெழுப்பப்படவேண்டுமே தவிர அவர்களின் நெருக்கடிகளை மேலும் அதிகரிப்பதற்கு இடமளிக்க முடியாது. கிராமிய மட்டத்திலான பொருளாதார நிலைமைகளைக் கட்டியெழுப்புவதன் ஊடாகவே நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். ஆகவே கிராமிய மட்டத்தில் உள்ள மக்களின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். அதற்காக இந்தச் சட்ட மூலம் பாரிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கின்றோம். மேலும் இஸ்லாமிய ஷரீஆ வங்கிச் சட்டங்களை இச்சட்டமூலத்தில் கவனத்தில் கொண்டு உள்வாங்கப்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM