அரச ஊழியர்கள், கலைஞர்கள், வர்த்தகர்களுக்கு எதிராக 2015 ஆம் ஆண்டு 256 முறைப்பாடுகள் பொலிஸ் நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தென்மாகாண மற்றும் சட்டம் ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரட்நாயக்க சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் சாகல ரட்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
2015 ஜனவரி 08 ஆம் திகதி முதல் 31 டிசம்பர் 2015 வரையிலான காலப்பகுதியில் அரச ஊழியர்களுக்கு எதிராக 114 முறைப்பாடுகளும் கலைஞர்களுக்கு எதிராக 05 முறைப்பாடுகளும் வர்த்தகர்களுக்கு எதிராக 137 முறைப்பாடுகளும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்துள்ளன. அந்த முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அவை முழுமையாக நிறைவேறாமையின் காரணமாக குறித்த நபர்கள் தொடர்பான விபரங்களை வெளியிட முடியாது எனக் கூறினார்.
இதன்போது பிரசன்ன ரணதுங்க எம்.பி. நீங்கள் கூறுவதை நான் ஏற்றுக் கொள்கின்றபோதும் பத்திரிகைகளில் பெயர்கள் வெளிவருகின்றன. அதனை நீங்கள் நிறுத்த வேண்டுமென கோரினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் பத்திரிகைகளில் பெயர்கள் வெளிவருவதற்கு நான் பொறுப்பேற்க முடியாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM