இந்தோனேசியாவுக்கு மேலாக பறந்த எதிஹாட் எயார்வேய்ஸ் விமானத்தில் ஏற்பட்ட கடுமையான குலுக்கத்தால் 31 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
அபுதாபியிலிருந்து புறப்பட்ட மேற்படி எயார்பஸ் ஏ330 – 200 விமானம் இந்தோனேசிய ஜகர்த்தா நகரிலுள்ள சோகர்னோ ஹத்தா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க 45 நிமிட நேரம் இருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அந்த விமானம் கடுமையாக குலுங்க ஆரம்பித்ததும் அதிலிருந்த பயணிகள் அச்சம் காரணமாக அழுது கூச்சலிட ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது விமானத்திற்குள் இருந்த பொருட்கள் அங்குமிங்கும் தூக்கி வீசப்பட்டதுடன் விமானத்தின் உள்ளேயிருந்த பொதிகளை வைப்பதற்கான கட்டமைப்புகளுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன..
அதுமட்டுமல்லாது விமானத்தின் உட்பக்க கூரைப் பகுதியிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.
எனினும் அந்த விமானம் பாதுகாப்பாக ஜகர்த்தா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் 9 பயணிகள் மற்றும் விமான ஊழியர் ஒருவர் உட்பட 10 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அந்த விமானத்தின் டுபாய்க்கு திரும்புவதற்கான பயணம் இரத்துச் செய்யப்பட்டு அதில் பயணம் செய்ய பதிவு செய்தவர்களுக்கு வேறு விமானங்களில் பயணங்களை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் விமான நிலைய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM