தெரி­வுக்­கு­ழுவின் இன்­றைய அமர்வு ரத்து

Published By: Vishnu

12 Jul, 2019 | 09:45 AM
image

(ஆர்.யசி)

பாரா­ளு­மன்ற வளா­கத்தில் இன்று கூட­வி­ருந்த பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு அமர்­வுகள்  ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ள­துடன்  மீண்டும் 24 ஆம் திகதி புதன்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது.   

இன்­றைய தெரி­வுக்­கு­ழு­விற்கு அழைக்­கப்­பட்­டி­ருந்த விசா­ர­ணை­யா­ளர்கள் சிலர் வெளி­நாட்டு விஜ­யத்தில்  இருப்­ப­தாலும்  சிலர் விசா­ரணை அமர்­வு­க­ளுக்கு  வர முடி­யாத வேறு கார­ணங்­களை கூரி­யுள்­ள­த­னாலும்  இன்­றைய தெரி­வுக்­குழு அமர்­வு­களை நிறுத்த குழு தீர்­மானம் எடுத்­துள்­ளது. அடுத்த மாதம் இறு­திக்குள் பிர­தமர் உள்­ளிட்ட முக்­கிய நபர்­களை அழைத்து விசா­ரணை நடத்தி அறிக்­கையை பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக தெரி­வுக்­குழு தலைவர் பிரதி சபா­நா­யகர் ஆனந்த குமா­ர­சிறி தெரி­வித்தார். 

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் குறித்து விசா­ர­ணை­களை நடத்தி பாரா­ளு­மன்­றத்­திற்கு அறிக்கை சமர்ப்­பிக்க நிய­மிக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­கு­ழுவின் அமர்­வுகள் இன்­றைய தினம் காலை 9 மணிக்கு கூடும் என கடந்த அமர்­வு­களின் போது தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது. இன்­றைய அமர்­வு­க­ளுக்­காக தெரி­வுக்­குழு முன்­னி­லையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்  ரவி சென­வி­ரத்ன, பொலிஸ் பயங்­க­ர­வாத விசா­ர­ணைப்­பி­ரிவின் பணிப்­பாளர் வருண ஜெய­சுந்­தர, அரச புல­னாய்வு பிரிவு சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜெய­வர்­தன , குற்­ற­வியல் விசா­ரணை திணைக்­கள பணிப்­பாளர் ஷானி அபே­சே­கர, பயங்­க­ர­வாத விசா­ரணை பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் தரங்க பதி­ரன ஆகியோர் அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர். எனினும் இவர்­களில் சிலர் வெளி­நாட்டு விஜ­யத்தில் இருப்­ப­தாலும், பொலிஸ் அதி­கா­ரிகள் சிலர் வர முடி­யாத சூழ்­நி­லையில் இருப்­ப­தாலும் இன்­றைய தெரி­வுக்­குழு அமர்­வு­களை எதிர்­வரும் 24 ஆம் திகதி புதன்­கி­ழ­மைக்கு ஒத்­தி­வைக்க தெரி­வுக்­குழு கூடி தீர்­மானம் எடுத்­துள்­ளது. 

அத்­துடன் எதிர்­வரும் 24 ஆம் திக­தி­யுடன் அரச அதி­கா­ரி­களை விசா­ர­ணைக்கு அழைப்­பதை  நிறுத்­து­வ­தா­கவும் அடுத்த அமர்­வு­களில் பிர­தமர் உள்­ளிட்ட முக்­கிய சிலரை விசா­ர­ணைக்கு அழைத்து அடுத்த மாதம் இறுதிக்குள் தெரிவுக்குழு அறிக்கையை முழுமைப்படுத்தி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க முயற்சிகளை முன்னெடுப்பதாகவும் தெரிவுக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13