ஏப்ரல் 21 தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய நெருக்கடி நிலைக்குத் தீர்வாக தங்களது அமைச்சுப் பதவிகளை கூட்டாக இராஜினாமா செய்து கொண்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் முன்னைய அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுக் கொள்ள நேற்றுத் தீர்மானித்தனர்.
தங்களது முன்னைய அமைச்சுப் பொறுப்புகளை மீண்டும் ஏற்றுக் கொள்வதா? இல்லையா? என்று அவர்கள் நேற்று மாலை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் ஒன்றுகூடி ஆராய்ந்தனர். நிலைமை ஓரளவு சீரடைந்துள்ளமையைக் கருத்திற் கொண்டு சமூகத்தின் நலன் கருதியும் மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள தீர்மானித்தனர்.
இக்கலந்துரையாடலில் அமைச்சர் கபீர் ஹாஷிமைத் தவிர ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமும் கலந்து கொண்டிருந்தார்.
ஜனாதிபதி தனிப்பட்ட வெளிநாட்டு விஜயமொன்றினை மேற்கொண்டிருப்பதால் அவர் நாடு திரும்பியதும் நாளை சனிக்கிழமை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து முன்னைய அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி 4 அமைச்சர்களும் 4 இராஜாங்க அமைச்சர்களும் ஒரு பிரதியமைச்சருமாக 9 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்தனர்.
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், கபீர் ஹாஷிம், எம்.எச்.ஏ.ஹலீம், ரிசாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர்களான பைசல் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, அலிசாஹிர் மௌலானா, பிரதியமைச்சரான அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோரே தங்களது பதவிகளைத் துறந்தவர்களாவர்.
இவர்களில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் எம்.எச்.ஏ.ஹலீம் ஆகிய இருவரும் அண்மையில் கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்க அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தலைமையில் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM