எமது அரசாங்கத்தில் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் - ரத்ன தேரர்

Published By: Vishnu

11 Jul, 2019 | 09:07 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட குருநாகலை வைத்தியசாலையின்  வைத்தியர் சேகு  சிஹாப்தீன் மொஹமட் ஷர்பி மீது  தாய்மார்கள் முன்வைத்த  குற்றச்சாட்டுக்கள் முறையான விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதா என்ற பாரிய சந்தேகம் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

அத்துடன் குற்றப்புலனாய்வு பிரிவினர் மீது  எவ்வித நம்பிக்கையும் கிடையாது. ஷாபிக்கு எதிராக தொடர்ந்து சாட்டப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் ஏதும் இதுவரையில்  முறையாக விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. சட்டமா அதிபர் திணைக்களம் இவ்விடயத்தில் ஒருதலை பட்சமாக செயற்படுகின்றது. ஆகவே  முறையான  அரசியல் தலையீடுகள் இல்லாத  சுயாதீன விசாரணைகள் இடம் பெற  சிறப்பு விசாரணை குழுவை  நியமிக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்து ஜனாதிபதியிடம்  கோரினோம். ஆனால் அவரும் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளையும்  முன்னெடுக்கவில்லை.

இந்த அரசாங்கத்தில் நீதி கிடைக்கும் என்று ஒருபோதும்  எதிர்பார்க்க முடியாது. இன்னும் 03 மாத காலமே ஆட்சியாளர்களினால் பதவியில் இருக்க முடியும்.  எமது அரசாங்கமே அடுத்து ஆட்சி பொறுப்பேற்கும் அப்போது பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும், அத்துடன்  வைத்தியர் ஷாபியின் சொத்து குவிப்பு தொடர்பிலும் உரிய   நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

குருநாகலை  நீதிமன்ற வளாகத்தில் இன்று வியாழக்கிழமை  ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38