(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டின் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதில் அர்த்தமில்லை. ஆளும் எதிர்கட்சிகள் இணைந்து ஒன்றாக பயங்கரவாத செயற்பாடுகளை தடுக்க வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று பிரதமர் அரசாங்கம் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஜே.வி.பி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையின் சாராம்சம் என்னவெனில் இந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதன் பின்னர் அரசாங்கம் சரியாக செயற்படவில்லை என்பதேயாகும்.
உண்மையில் இந்த சம்பவம் அரசாங்கதின் பலவீனத்தை காட்டுகின்றது. தவறுக்கு அரசாங்கமாக நாம் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும். ஆனால் இதற்கு தீர்வு அரசாங்கத்தை வீழ்த்துவதா அல்லது அனைத்து கட்சிகளும் இணைந்து இந்த பயங்கரவாதத்தை இல்லாது ஒழிப்பதா என்பதை சிந்திக்க வேண்டும்.
இன்று புதிய பயங்கரவாதம் பலமடைந்துள்ளது. இதனை வெற்றிகொள்ள மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ள செயற்பட வேண்டும். இதில் தவறு எங்கு விடப்பட்டது என்பதை சிந்தித்து அதனை திருத்திக்கொள்ள வேண்டும். ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையில் தொடர்பின்மையே இதற்குக் காரணம். ஆனால் இன்று நாம் நாடாக வெற்றிகொள்ள வேண்டும். இதில் ஜே.வி.பி - கூட்டமைப்பு - பொதுஜன பெரமுன என அனைவரும் இணைந்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM