ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக களமிறங்குகிறார் தென்னாபிரிக்க அணியின் தொடக்க வீரர் ஹசீம் அம்லா.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்த ஷோன் மார்ஷ் காயம் காரணமாக விலகினார். இதையடுத்து அவருக்குப் பதிலாக அம்லாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது பஞ்சாப். இந்த தொடரில் எஞ்சிய போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக அவர் ஆடுகிறார்.
இதை டுவிட்டரில் உறுதி செய்துள்ள அம்லா, "ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடுவதற்காக மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 19-ஆம் திகதி நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் மார்ஷுக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இந்தத் தொடரில் இதுவரை 4 அவுஸ்திரேலிய வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளனர். முன்னதாக ஹேஸ்டிங்ஸ், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் விலகியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM