ஐ.பி.எல். தொடரில் வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் உள்ள டோனி தலைமையிலான புனே அணி நேற்றைய போட்டியில் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில டெல்லியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் புனே அணிக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைக் குவித்தது.
டில்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற புனே அணித் தலைவர் டோனி களத் தடுப்பைத் தேர்வு செய்ய, ரிஷப் பாண்டும்,சஞ்ஜு சாம்சனும் டெல்லியின் துடுப்பாட்டத்தை தொடங்கினர். வந்த வேகத்திலேயே பாண்ட் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சாம்சனுடன் இணைந்தார் கருண் நாயர். இந்த ஜோடி 2ஆவது விக்கெட்டுக்கு 35 ஓட்டங்களை சேர்த்தது. சாம்சன் 20 ஓட்டங்களைப் பெற்று வெளியேற, டுமினி களம்புகுந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய கருண் நாயர் 32 ஓட்டங்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து சாம் பில்லிங்ஸ் களமிறங்கினார். ஒருபுறம் டுமினி நிதானமாக ஆட, மறுமுனையில் வேகமாக ஆடிய பில்லிங்ஸ் 24 ஓட்டங்களுடன் வெளியேறினார். இதையடுத்து வந்த பிரத்வெயிட், முருகன் அஷ்வின் வீசிய 16ஆவது ஓவரில் இரு சிக்ஸர்களை விளாசினார். தொடர்ந்து வேகம் காட்டிய அவர், 8 பந்துகளில் 20 ஓட்டங்களைசேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் டுமினி 34 ஓட்டங்களுடன் ரன் அவுட்டானார்.
இதனால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 162 ஓட்டங்களைக் குவித்தது டெல்லி.
163 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய புனே அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 166 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
இதில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக ரஹானே மற்றும் கவாஜா ஆகி யோர் களமிறங்கினர். இந்த ஜோடி அபாரமாக ஆடி ஓட்டங்களைக் குவித்துக்கொண்டிருக்க, 30 ஓட்டங்களுடன் கவாஜா ஆட்டமிழக்க, அடுத்து வந்த திவாரியும் 21 ஓட்டங்களுடன் வெளியேறினார். அதன்பிறகு களமிறங்கிய டோனி, ரஹானேவுடன் ஜோடி சேர்ந்து ஓட்டங்களைக் குவித்தார். இறுதியில் டோனியும் 27 ஓட்டங்களுடன் ஆட் டமிழக்க, திஸர பெரேரா களமிறங்கி போட்டியை முடித்து வைத்தார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக ஆடிய ரஹானே 63 ஓட்டங்களையும் திஸர 14 ஓட்டங்களையும் பெற்றனர்.
இறுதியில் 5 பந்துகள் மீதமிருக்க 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 166 ஓட்டங்களைப் பெற்று புனே அணி வெற்றிபெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM