பாகிஸ்தானில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந் துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் கிழக்கு மாகாணத்துக்கு உட்பட்ட சாதிக்கபாத் தேசில் பகுதியில் வால்கர் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் ஒன்று நின்று கொண்டிருந்த போது எதிர்திசையில் வந்த பயணிகள் ரயில் தவறான தண்டவாளத்தில் சென்று சரக்கு ரயில் மீது மோதியது.
இதில் பயணிகள் ரயிலின் என்ஜின் பகுதியும் 3 பெட்டிகளும் நொறுங்கின. குறித்த விபத்தில் ஒரு பெண், 8 ஆண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். 60-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
குறித்த சம்பத்தில் காயமடைந்தவர்களை பொலிஸார் மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இம்ரான்கான், ஜனாதிபதி ஆரிப் அல்வி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரயில் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவும் ரயில்வே அமைச்சருக்கு பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM