வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பிய மனை­வியின் கழுத்தை வெட்டி  படுகொலை­ செய்த கணவன்

Published By: R. Kalaichelvan

11 Jul, 2019 | 11:13 AM
image

மத்­திய கிழக்கு நாடொன்றில் இரண்­டரை வருட கால­மாக பணிப்பெண்­ணாக இருந்து வீடு திரும்­பிய மனை­வியின் கழுத்தை வெட்டி கொலை செய்த கணவன், கொலைக்கு பயன்­ப­டுத்­திய கத்தி­யுடன் ஹச­லக்க பொலிஸ் நிலை­யத்தில் நேற்று சரணடைந்துள்­ள­தாக பொலிஸார் தெரிவித்­தனர்.

ஹச­லக்க என்ற இடத்­தைச்­சேர்ந்த ஸ்ரீயாணி தயா­ரட்ன என்ற 42 வய­து­டைய மூன்று பிள்­ளை­களின் தாயே, அவ­ரது கண­வ­ரினால் கொலை செய்­யப்­பட்­ட­வ­ராவார்.

கொலை செய்­யப்­பட்ட பெண்ணின் கண­வ­னான டக்ளஸ் ஒப­சே­கர என்ற 49 வயது நிரம்­பிய நபர், மனை­வியை கொலை செய்த பின்னர், அச்­ச­ட­லத்தை வீட்­ட­ரு­கா­மை­யி­லுள்ள வயல்வெளிக்கு இழுத்­துச்­சென்று, அங்கு குவிக்­கப்­பட்­டி­ருந்த வைக்­கோ­ளுடன் போட்டு தீ வைத்­துள்ளார். 

சடலம் முழு­மை­யாக எரி­யாமல் அரை­கு­றை­யாக எரிந்த நிலையிலான சட­லத்தை பொலிசார் மீட்­டுள்­ளனர்.

இச்­சம்­பவம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

மத்­தி­ய­கி­ழக்கு நாட்­டி­லி­ருந்து, நாடு திரும்­பிய குறித்த பெண், நேரடி­யாக தமது வீட்­டிற்கு வராமல், கம்­ப­ளை­யி­லுள்ள தமது தாய் வீட்டில் தங்­கி­யி­ருந்து, ஒரு வாரத்­திற்கு பின் நேற்­று ­முன்­தினம் ஹச­லக்க என்ற இடத்­தி­லுள்ள தமது வீட்­டிற்கு  வந்­துள்ளார். 

அதை­ய­டுத்து, கண­வ­ருக்கும் மனை­விக்­கு­மி­டையில் வாய்த்­தர்க்­கமும், வாக்­கு­வா­தங்­களும் ஏற்­பட்­டுள்­ளன. இவ் வாக்­கு­வா­தங்கள் முற்­றி­ய­தினால், ஆத்­தி­ர­ம­டைந்த கணவன், கத்­தி­யொன்­றினை எடுத்து, தனது மனை­வியின் கழுத்தை வெட்­டிக்­கொலை செய்துள்ளார்.

இது குறித்து ஹச­லக்க பொலி­ஸா­ருக்கு கிடைக்­கப்­பெற்ற தக­வ­லை­ய­டுத்து, விரைந்த பொலிஸார், வீட்­டுக்­க­ரு­கா­மை­யி­லுள்ள அரை­வாசி எரிந்த நிலை­யி­லான சட­லத்தை மீட்­டுள்­ளனர். அதைத்­தொ­டர்ந்து கொலை செய்­யப்­பட்ட மனை­வியின் கணவன், கொலைக்கு பயன்­ப­டுத்­திய இரத்தம் தோய்ந்த நிலை­யி­லான கத்­தி­யுடன், ஹச­லக்க பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­புதல் வாக்­கு­மூ­லமும் அளித்­துள்ளார். 

பொலி­ஸா­ரினால் மீட்­கப்­பட்ட சட­லத்தை மகி­யங்­கனை மஜிஸ்ரேட் நீதி­பதி எஸ். கோவிந்த ஸ்தல விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்ளார். இத­னை­ய­டுத்து  சட்ட வைத்­திய விசா­ர­ணை­களை மேற்­கொள்ள, மகி­யங்­கனை அர­சினர் மருத்­து­வ­மனை பிரேத அறைக்கு கொண்டு செல்­லு­மாறும், சட்­ட­வைத்­திய அறிக்­கையை சமர்­ப்பிக்­கும்­ப­டியும், நீதி­பதி பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்டார். 

அத்­துடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நபரை எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி பணிப்புரை வழங்கினார். ஹசலக்க பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கப்பில பண்டார, மேற்படி சம்பவம் தொடர்பான புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02