பாட­சாலை சமூ­கத்­துக்கு வழங்­கப்­பட்­டுள்ள குழாய் நீர் இணைப்பு குறித்த ஒரு கண்ணோட்டம்

Published By: R. Kalaichelvan

11 Jul, 2019 | 10:53 AM
image

சமூக பொரு­ளா­தார மற்றும் ஆரோக்­கிய வாழ்வில் பாரிய செல்­வாக்குச் செலுத்தும் ஒன்­றா­கவும் தற்­கால சந்தை பொரு­ளா­தா­ரத்தில் தனகென தனித்­து­வ­மான அடை­யா­ளத்தை தன்­ன­கத்தே கொண்­டுள்ள ஒன்­றா­கவும் நீர் காணப்­ப­டு­கின்­றது.

உலக சனத் தொகையில் ஒவ்­வொரு நான்கு பேரிலும் மூவர் அருந்­து­வ­தற்கு தூய நீரின்றி அவ­திப்­ப­டு­வ­தாக ஐக்­கிய நாடு­களின் அறிக்கை சுட்­டிக்­காட்­டு­வ­தோடு ஒவ்­வொரு எட்டு விநா­டி­க­ளுக்கும் ஒரு குழந்தை மர­ணிப்­ப­தா­கவும்  தெரி­விக்­கின்­றது. சுத்­த­மான குடிநீர் என்­பது மனி­தனின் ஆரோக்­கி­யத்தில் ஆழ­மாக தாக்கம் செலுத்தும் ஒன்­றா­கவும் உள்­ளது. 

இலங்­கையில் தற்­போ­தைய நிலையில் இரு­பத்து மூன்று இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட நீர் இணைப்­புக்கள் மூலம் பாவ­னை­யா­ளர்­க­ளுக்கு திருப்­தி­ய­ளிக்கும் வகையில் சுத்­த­மான குடி­நீரை 24 மணி நேரமும் வழங்­கு­வ­தற்­காக அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டு வரும் ஒரு தேசிய நிறு­வனம் தேசிய நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்புச் சபை­யாகும். இது இலங்­கையின் தர (SLS-Sri Lanka Standards Institution) மற்றும் சர்­வ­தேச தர (ISO-International Organization for Stansardization) நிர்­ண­யங்­க­ளுக்­கேற்ப நீரினை சுத்­தி­க­ரித்து தனது 343 நீர் வழங்கல் திட்­டங்­க­ளூ­டாக விநி­யோ­கித்து வரு­கின்­றது. தேசிய நீர் வழங்கல் சபை மூலம் வழங்­கப்­ப­டு­கின்ற ஒரு நீர் அலகு என்­பது ஆயிரம் லீற்­றர்­க­ளாகும். அவ்­வாறு ஆயிரம் லீற்­றர்கள் நீரை சுத்­தி­க­ரிப்­ப­தற்­காக மற்றும் விநி­யோ­கிப்­ப­தற்­காக இச்­ச­பைக்கு சுமார்  50 ரூபா செல­வா­கின்­றது.

தேசிய நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்புச் சபை­யா­னது ஆரோக்­கி­ய­மான எதிர்­கால சந்­த­தி­யி­னரை உரு­வாக்கும் இலக்­குடன் மேற்­படி பாரிய நிதியை செல­வ­ழித்து சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட குடி­நீ­ரினை மாணவர் சமூகம் குடிப்­ப­தற்­காக ஒரு பாட­சா­லைக்கு ஒரு நீர் இணைப்பு என்ற அடிப்­ப­டையில் (சுற்று நிருபம் இல. A07/2012) உற்­பத்தி செல­வை­விட குறைந்த சலுகை கட்­ட­ணத்தில் வழங்­கி­வ­ரு­கின்­றது. 

பாட­சாலை கணக்­கெ­டுப்பின் படி இலங்­கையில் 10,162க்கு மேற்­பட்ட பாட­சா­லைகள் காணப்­படும் நிலையில் அதில் 4,000 க்கு உட்­பட்ட  பாட­சா­லை­க­ளுக்கு தேசிய நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்புச் சபை மற்றும் சமு­தாய அடிப்­படை நீர் வழங்கல் திட்­டங்­க­ளி­லி­ருந்தும் குடிநீர் விநி­யோகம் வழங்­கப்­பட்டு வரு­கின்­றது. 

 

இந்­நி­லையில் அண்­மையில் மேற்­கொள்­ளப்­பட்ட  அவ­தா­னிப்­புக்­களின் பிர­காரம் கணி­ச­மான  பாட­சா­லை­களில் அங்குள்ள மாணவர் தொகைக்கு ஒப்­பான குடிநீர் பாவ­னையை விட அதி­க­ரித்த நீர் பாவனை பதி­வா­கி­யுள்­ளது. அவற்­றுக்­கான கார­ணங்­க­ளாக பின்­வ­ரு­வன இனம் காணப்­பட்­டுள்­ளன.

1. பாட­சா­லை­களில் இடம் பெறும் கட்­டு­மான பணி­க­ளுக்கு பாவித்தல்

2. பாட­சாலை சூழ­லி­லுள்ள பூந்­தோட்­டங்கள் மற்றும் மலர்ச்­செ­டி­க­ளுக்கு பாவித்தல்

3. கவ­னிப்­பற்று அல்­லது பரா­ம­ரிப்­பற்று காணப்­படும் சிறிய  அள­வி­லான நீர்க் கசி­வுகள்  

4. பாட­சாலை விடு­முறை நாட்­களில் ஏற்­படும் அவ­தானம்  செலுத்­தப்­ப­டாத  உள்­ளக நீர் கசி­வுகள்

பாட­சா­லை­களில் தொடர்ச்­சி­யாக அதி­க­ரித்த நீர்ப் பாவனை காணப்­ப­டு­மி­டத்து அதா­வது பாட­சா­லை­களில்  மாண­வர்­களின் எண்­ணிக்­கைக்கு ஒப்­பான பாவ­னை­யை­விட அதி­க­ரித்த பாவனை காணப்­ப­டு­மாயின் அம்­மே­ல­திக பாவ­னைக்­கான கட்­ட­ணத்தை வர்த்­தக அடிப்­ப­டையில் உரிய பாட­சாலை செலுத்த வேண்டி வரலாம் என்­பது இங்கு குறிப்­பி­டத்­தக்­க­தாகும். வர்த்­தக அடிப்­ப­டையில் என்னும் போது ஆயிரம் லீற்­றர்-­ஒரு அலகு நீர் பாவ­னைக்­கான கட்­ட­ண­மாக 75 ரூபா செலுத்த வேண்டும்  என்­பது இங்கு நினைவில் கொள்­ளத்­தக்­க­தாகும்.

அவ்­வாறு செலுத்த தவறும் பட்­சத்தில் குறித்த நீர் இணைப்பு தொடர்­பான மீள்­ப­ரி­சீ­ல­னையை தேசிய நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்புச் சபை எடுக்­கலாம் என்­பதும் இங்கு நினைவில் கொள்­ளத்­தக்­க­தாகும். 

மேலும் இவ்­வா­றான அதி­க­ரித்த நீர் பாவனை காணப்­ப­டு­மி­டத்து அதனை மட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக சில பாட­சா­லை­களில் சடு­தி­யாக எடுக்­கப்­படும் நட­வ­டிக்­கை­களால் மாண­வர்கள் தமது அடிப்­படை தேவைக்­கு­ரிய போதி­ய­ள­வான நீரினை பெற்­றுக்­கொள்­வதில் வரை­ய­றை­களும் நில­வு­கின்­றன. இது அவர்­களின் ஆரோக்­கி­யத்தில் பாதிப்பை செலுத்த வல்­லது எனலாம். 

பாட­சா­லையில் இடம் பெறும் கட்­டு­மான பணி­க­ளுக்கு நீர் தேவைப்­ப­டு­மாயின் அதற்­காக உரிய ஒப்­பந்­த­காரர் தற்­கா­லிக நீர் இணைப்பை தேசிய நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்புச் சபையிட­மி­ருந்து பெற்­றுக்­கொள்ள முடியும். அத்­துடன் விடுதி வச­தி­யுள்ள பாட­சா­லைகள் குறித்த பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு குடி­நீ­ருக்­காக வழங்­கப்­பட்ட நீர் இணைப்­பி­லி­ருந்து நீரை பயன்­ப­டுத்த முடி­யாது. அவ் விடு­தி­க­ளுக்கு நீர் தேவைப்­ப­டு­மாயின் அதற்­கான பிரத்­தி­யேக நீர் இணைப்பை  அல்­லது நீர் இணைப்­புக்­களை பாட­சாலை நிர்­வாகம் பெற்­றுக்­கொ­டுத்தல் வேண்டும். 

ஏனெனின் அவை­க­ளுக்­கான கட்­ட­ணங்கள் பாட­சாலை மாண­வர்­க­ளுக்­காக வழங்­கப்­படும் குடி­நீ­ருக்­கான கட்­டங்­க­ளி­லி­ருந்து முற்­றிலும் மாறு­பட்­ட­தாகும்.    

பாட­சாலைச் சூழலில் காணப்­படும் நீர் விநி­யோக குழாய் வலை­ய­மைப்பில் நீர் கசி­வுகள் ஏற்­படும் நிலையில்  அவை­களை சீர் செய்­வ­தற்­கான உத­விகள்  தேவைப்­ப­டு­மாயின் அதனை தங்­க­ளது பிர­தே­சத்­துக்கு பொறுப்­பான நீர் வழங்கல் காரி­யா­ல­யத்தை தொடர்பு கொள்­வதன் மூலம் பெற்­றுக்­கொள்ள முடியும் என்­பதும் இங்கு குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

மேலே உள்ள விட­யங்­களை கருத்­திற்­கொண்டு பாட­சாலை மாணவர் சமூ­கத்­துக்­கான சலுகை கட்­ட­ணத்­தி­லான சுத்­த­மான குடி­நீ­ரினை இடை­யூறு இன்றி தொடர்ச்­சி­யாக பெற்றுக்கொள்வதில்  பாடசாலை நிர்வாகத்தினதும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினதும் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். இது 10,162க்கு மேற்பட்ட பாடசாலைகளைக் கொண்ட இலங்கையில் இன்னும் சுத்தமான குழாய் குடிநீர் விநியோகம் இன்றி காணப்படும் 6,000 க்கு மேற்பட்ட பாடசாலைகளுக்கு எதிர்காலத்தில் சுத்தமான குடிநீரினை வழங்கவும்  நிலைத்து நிற்கும் அபிவிருத்தியின் ஆறாவது இலக்கான 2030ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் என்ற இலக்கை எட்டுவதற்கும் உறுதுணையாக அமையும் எனலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13