தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை - சிவாஜிலிங்கம்

Published By: Daya

11 Jul, 2019 | 01:07 PM
image

கடந்த ஏழு மாதங்களாக தமிழ் மக்கள் எதிர்பார்த்த எதிர்பார்ப்புக்களிலே மிகப் பெரிய அளவிலே எதுவும் நடக்காத ஒரு ஏமாற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றதென தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்டக் குழு தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் அரசியல் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

குறிப்பாக அரசியல் கைதிகள் விடுதலை, கட்டாயமாகக் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் பிரச்சினை, காணிகள் விடுவிப்பு, இராணுவ முகாம்கள் குறைப்பு, இதைப் போல அரசியல் தீர்வு அது இப்போது இல்லையென்று ஆகிவிட்ட சூழ்நிலையிலே சில அத்தியாவசியமான தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலைமையுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் அலுவலகத்தில் நேற்று மாலை நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்து அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப வேண்டுமென்ற நியாயமான கோரிக்கைகள் ஈழத் தமிழ் மக்கள் சார்பிலே இருந்த பொழுதும் கூட இன்னமும் எஞ்சியிருக்கக் கூடிய காலத்திலே ஒரு சில விடயங்களையாவது ஆற்றியிருப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற ஒரு சில மக்களுடைய எதிர்பார்ப்பையும் ஈடு செய்யக் கூடிய விதத்திலே இந்த பிரேரனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் நடுநிலை வகிக்கவேண்டும்.

அவ்வாறு நடுநிலை வகிக்கும் நிலைப்பாட்டை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுக்காமல் அரசைக் காப்பாற்றும் வகையில் அரசிற்கு ஆதரவாக வாக்களிப்பார்களாயின் மக்கள் மத்தியிலிருந்து கூட்டமைப்பு தூக்கி வீசப்படக் கூடிய ஆபத்து இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னயினால் அரசிற்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடைபெற இருக்கின்றது. இந்தச் சூழ் நிலையிலே தமிழ் மக்கள் உட்பட முழு நாடும் குறிப்பாக கூட்டமைப்பின் முடிவு என்ன என்பதை அறிவதற்கு மிகப் பெரிய அளவிலே ஆவலாக இருந்து கொண்டிருக்கின்றனர்.

இந்தச் சூழ்நிலையின் பின்னணியிலே தான் இதுவரை 2015 ஆம் ஆண்டிலிருந்த நல்லாட்சி அரசாங்கம் என்று ஐனாதிபதித் தேர்தலிலும் அதனைத் தொடர்ந்து பாராளுன்றத் தேர்தலிலும் அதன் பின்னர் அரசிற்கு கூட்டமைப்பு அளித்து வந்த ஆதரவையும் அதைப் போல கடந்தாண்டு ஒக்டோபர் மாதத்தில் நடந்த சதிப் புரட்சியின் பின்னரும் கூட மீண்டும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியைக் கொண்டு வருவதற்கு கூட்டமைப்பின் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமாக இருந்தது.

இந்தச் சூழலின் பின்னரும் கூட கடந்த ஏழு மாதங்களாக தமிழ் மக்கள் எதிர்பார்த்த எதிர்பார்ப்புக்களிலே மிகப் பெரிய அளவிலே எதுவும் நடக்காத ஒரு ஏமாற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக அரசியல் கைதிகள் விடுதலை, கட்டாயமாகக் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் பிரச்சினை, காணிகள் விடுவிப்பு, இராணுவ முகாம்கள் குறைப்பு, இதைப் போல அரசியல் தீர்வு. அது இப்போது இல்லையென்று ஆகிவிட்ட சூழ்நிலையிலே சில அத்தியாவசியமான தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலைமையுள்ளது என எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46