(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)
பயங்கரவாத தாக்குதல் யாரும் எதிர்பார்க்காத நிலையில் இடம்பெற்றதொன்றாகும். நாட்டில் அடிப்படைவாத அமைப்புக்கள் இருந்தன. ஆனால் அது பயங்கரவாத நிலைக்கு மாறி இருப்பதாக எந்த தகவலும் அரசாங்கத்துக்கு கிடைக்கவில்லை. அத்துடன் பிரேரணையில் பிரதமரை மாத்திரம் குற்றம் சுமத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் மக்கள் விடுதமலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவந்திருந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நம்பிக்கையில்லா பிரேரணையை பார்க்கும் போது இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு அமைச்சருக்கு எந்த பொறுப்பும் இல்லாது போன்றே இருக்கின்றது. பிரதமர் மீதும் அரசாங்கத்தின் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். பாதுகாப்பு அமைச்சர் தொடர்பாக குறிப்பிடாது பிரதமர் தொடர்பாக மாத்திரம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இது வேண்டுமென்றே செய்த செயற்பாடே ஆகும்.
அத்துடன் திரைக்கு பின்னால் என்ன நடந்தது என்பதனை அறிந்துக்கொள்ளவே நாங்கள் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்தோம். இதன் மூலம் பலவிடயங்கள் வெளிவந்துள்ளன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM