சட்ட விரோதமாக இரும்பு கடத்த முற்பட்ட மூவர் கைது

Published By: Vishnu

10 Jul, 2019 | 01:25 PM
image

அம்பாந்தோட்டை துறைமுக வளாகத்திற்கருகிலிருந்து சட்ட விரோதமாக இரும்பினைக் கொண்டு செல்ல முற்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து கடந்த திங்கட்கிழமை முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து சட்ட விரோதமாக கொண்டு செல்வதற்கு ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்த 1500 கிலோ கிராம் இரும்பு மீட்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் 23 , 39 வயதுடைய அம்பலாந்தோட்டை, அம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

இவர்களிடமிருந்து மீட்கப்பட்ட இரும்பு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அம்பாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41