(நா.தனுஜா)
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடை யில் படைகளின் அந்தஸ்து உடன்படிக்கை (சோபா) என்ற ஒன்று இல்லை. அத்தகைய உடன்படிக்கை ஒன்றுக்கு அவசியமான முன்மொழிவு எதுவும் அதற்குப் பொறுப்பான பாதுகாப்பு அமைச்சினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
அமெரிக்காவுடனான சோபா மற்றும் மிலேனியம் சவால் ஒத்துழைப்பு ஆகிய உடன்படிக்கைகள் தொடர்பில் அதிகபட்ச வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுமாறு கோரி இலங்கை வர்த்தக சபையின் தலைவர் ஹான்ஸ் விஜேசூரிய கடந்தவாரம் பிரதமருக்குக் கடிதமொன்றை அனு ப்பிவைத்ததுடன், அக்கடிதத்தின் பிரதி ஊடகங்களுக்கும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஹான்ஸ் விஜேசூரியவின் கடிதத்திற்குப் பதிலளிக்கும் வகையில் பிரதமரின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பீ.ஏக்கநாயக்க கையெழுத்திட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
சோபா மற்றும் மிலேனியம் சவால் ஒத்துழைப்பு ஆகிய உடன்படிக்கைகள் தொடர்பில் உச்சபட்ச வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுமாறு கோரிக்கை விடுத்து பிரதமருக்கு கடந்த 3 ஆம் திகதி கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தீர் கள்.
அக்கடிதத்தின்படி சோபா மற்றும் மிலேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கைகள் பற்றிய விடயங்கள் தொடர்பில் இலங்கை வர்த்தக சபையின் அறியாமை குறித்து பிரதமர் அதிர்ச்சியடைந்தார் என்பதை அறியத்தர விரும்புகிறேன்.
நல்லாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையை மதித்து மிலேனியம் சவால் ஒத்துழைப்பு குறித்து நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் கடந்த 2016 ஏப்ரல் மாதம் 4ஆம், 7ஆம், 8ஆம் திகதிகள், ஜுன் மாதம் 14ஆம், 22ஆம் திகதிகள், 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம், 6ஆம் திகதிகள் மற்றும் கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம், 27ஆம் திகதிகளில் கடிதம் ஊடாக இலங்கை வர்த்தக சபை மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு அறியத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
மிலேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கை மற்றும் அதன் உத்தேச செயற்றிட்டம் தொடர்பில் உங்களுக்கு அறியத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீங்கள் அறிந்தவாறு இந்த செயற்றிட்டத்தைப் பிரேரித்தது எமது அரசாங்கமாகும். அமெரிக்க அரசாங்கத்தினால் 490 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடை இதற்காக வழங்கப்படுகின்றது. இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் அதற்கான அனுமதி பெறப்படவேண்டும். இது அமெரிக்காவில் மாத்திரமன்றி, ஐரோப்பிய நாடுகளிலும் காணப்படும் ஒரு நிதிசார் நடைமுறையாகும்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டத்திற்கு அமைய இந்த உடன்படிக்கை பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவினால் மீளாய்வு செய்யப்படுவதற்கும், அதுசார்ந்த தரப்பினரின் முன்மொழிவுகளைப் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை இலங்கை மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு இடையில் சோபா உடன்படிக்கை இல்லை என்பதுடன், அதுசார்ந்த மாதிரி பிரேரணைகள் எவையும் அதனுடன் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அமைச்சினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படவும் இல்லை.
இவ்விடயங்கள் தொடர்பில் மீண்டும் விளக்கமளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கியமை குறித்து நன்றி தெரிவிக்கின்றோம். அதேவேளை அனைத்துச் செயற்பாடுகளி லும் பங்குதாரராகச் செயற்பட்ட இலங்கை வர்த்தகசபை திடீரென்று எதுவும் அறியாதவர் போன்று நடந்து கொள்கின்றமை தொடர்பில் பிரதமர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தற்போது அரசி யல் கட்சி ஒன்றினால் கூறப்பட்டுவரும் கருத்து சார்ந்து நோக்குகையில், இந்தத் திடீரென்ற அறியாமை உங்கள் நோக்கம் மற்றும் நம்பகத்தன்மை குறித்து சந்தே கத்தை ஏற்படுத்துவதாகவும் பிரதமர் கருது கின்றார். புகழ்பெற்ற வர்த்தக அமை ப்பான இலங்கை வர்த்தகசபை உங்களு டைய தலைமையின் கீழ் (ஹான்ஸ் விஜே சூரிய) அரசியல் மயப்பட்டுள் ளமை கவலைக்குரிய விடயமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM